இங்கிலாந்து கிரிக்கெட் இந்தியாவை பார்த்து இதை கத்துக்கணும்.. டிராவிட் விஷயத்தை பாருங்க – மைக்கேல் ஆதர்டன் அறிவுரை

0
474
Dravid

தற்போது இங்கிலாந்து கிரிக்கெட்டின் மூன்று வடிவத்திற்கும் புதிய தலைமை பயிற்சியாளராக பிரண்டன் மெக்கலம் கொண்டுவரப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் ஆதர்டன் இந்தியாவை வைத்து முக்கிய அறிவுரை ஒன்றை கூறியிருக்கிறார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி சிவப்பு பந்து வடிவத்திற்கு ஒரு பயிற்சியாளரையும் வெள்ளைப்பந்து வடிவங்களுக்கு இன்னொரு பயிற்சியாளரையும் வைத்துக்கொள்ளும் அணுகுமுறையை கொண்டிருந்தது. தற்போது அவர்கள் மூன்று வடிவத்திற்கும் இந்தியா போல ஒரே பயிற்சியாளரை கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட் சரிவு

2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை என சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து வென்ற இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகள், அடுத்த இரண்டு உலகக் கோப்பையில் எதிர்பார்க்காத அளவுக்கு மோசமாக விளையாடி சரிந்தன. இந்த நிலையில் இந்த அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக இருந்த மேத்யூ மோட்ஸ் பதவி விலகினார்.

தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் பிரண்டன் மெக்கலமை, இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணிகளுக்கும் பயிற்சியாளராக கொண்டு வந்திருக்கிறார்கள். இதனால் அவருக்கு கூடுதல் பொறுப்புடன் சவாலும் சேர்ந்திருக்கிறது.

- Advertisement -

இந்தியாவை போல செயல்பட வேண்டும்

இதுகுறித்து பேசி இருக்கும் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் ஆதர்டன் கூறும் பொழுது ” தற்போது பிரண்டன் மெக்கலம் இங்கிலாந்தின் மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் புதிய பயிற்சியாளராக வந்திருப்பதால் இது அவரைச் சுற்றியுள்ள அனைவருக்கும் பொறுப்புகளை அதிகரிக்கும். தற்போது இடைக்கால பயிற்சியாளராக இருக்கும் மார்க்கஸ் டிரெஸ்கோதிக் அவ்வப்போது மெக்கலமுக்கு ஓய்வு கொடுக்க தேவைப்படுவார்.

இந்தியா இதை எப்படி செய்திருக்கிறது என்று பார்க்க வேண்டும். ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திற்கும் தலைமை பயிற்சியாளராக இருந்தார். ஆனாலும் அவ்வப்போது அவருக்கு ஓய்வு கொடுப்பதற்கு சில தொடர்களுக்கு லட்சுமணன் இடைக்கால பயிற்சியாளராக வந்தார்.

இதையும் படிங்க : ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்.. 59 வருடம்.. பாக் அணி மிகப்பெரிய சறுக்கல்.. இந்திய ஆஸ்திரேலிய அணிகள் அபாரம்

எனக்கு மெக்கலம் திறமை மீது எந்த சந்தேகமும் கிடையாது. முன்பு டெஸ்ட் அணி பலவீனமாக இருந்தது வெள்ளைப்பந்து அணிகள் வலிமையாக இருந்தது. தற்போது நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. எனவே மெக்கலம் கூடுதலாக செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. இது அவருக்கு பெரிய சவாலை கொடுக்கும். எனவே அவருக்கு சரியான நேரத்தில் ஓய்வு தேவை. இதற்கு இந்தியா செயல்பட்டது போல செயல்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -