எங்க ஆஸியை இந்திய அணி வீழ்த்தும்.. இந்த 2 இந்திய வீரர்கள் கலக்குவாங்க – ஸ்டீவ் வாக் கணிப்பு

0
2378
India Australia and Steve waugh

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடர் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்டீவ் வாக் ஆச்சரியம் அளிக்கும் விதமாக இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறி அதற்கான காரணத்தை தெளிவாக விளக்கி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாலில் கடைசியாக நடைபெற்ற இரண்டு டெஸ்ட் தொடரையும் வெற்றி பெற்று அடுத்ததாக இந்தியாவில் நடைபெற்ற மூன்றாவது தொடரையும் கைப்பற்றி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் இந்த முறை எப்படியாவது தங்களது சொந்த மண்ணில் நடைபெற உள்ள தொடரை கைப்பற்ற வேண்டும் என்று ஆஸ்திரேலியா அணியினர் மிக தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்காக ஆஸ்திரேலிய முன்னணி வீரர்கள் பலர் தற்போது ஓய்வு எடுத்து வரும் நிலையில், இந்திய பந்துவீச்சு கூட்டணி மிகவும் வலுவாக இருப்பதாகவும் மேலும் இந்திய அணியின் விராட் கோலி முக்கியத் துருப்பு சீட்டாக இருப்பார் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “இரண்டுமே சம பலம் பொருந்திய அணிகள் என்பதால் இந்த தொடர் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் இந்திய அணியில் நல்ல பந்துவீச்சு தாக்குதல் உள்ளது. பும்ரா, சிராஜ், சமி என சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களைக் கொண்டிருக்கின்றனர். மேலும் ஜடேஜா, அஸ்வின், குல்தீப் என நல்ல சுழற் பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர்.

ஆனால் பும்ராவின் பந்துவீச்சு மற்றும் விராட் கோலியின் பேட்டிங் இந்த தொடரில் முக்கிய பங்கு வகிக்கும். பும்ரா ஒரு சிறந்த பந்துவீச்சாளர், அவர் எந்த அளவுக்கு விக்கெட்டுகளை வீழ்த்துகிறாரோ இந்திய அணிக்கு தொடரை வெல்ல வாய்ப்புகள் அதிகரிக்கும். அதேபோல வெளிநாட்டில் விராட்டின் பேட்டிங் எந்த அளவு இருக்கிறது என்பதை பார்த்திருக்கிறோம்.

இதையும் படிங்க:எங்க 2 பேர்க்கு நடந்த அந்த விஷயம்தான்.. இப்போ பாண்டியாவுக்கு நடக்குது.. ஆனா அவர் மாத்தலாம் – பார்த்தீவ் பட்டேல் கருத்து

இந்திய அணியின் பேட்டிங் வரிசை இவரை நம்பியே உள்ளது. எனவே பேட்டிங் வரிசைக்கு அவர் தலைமை வகிப்பார். இருந்தாலும் மிகச்சிறந்த பந்து வீச்சு கூட்டணியோடு ஆஸ்திரேலியாவும் வலிமையான தாக்குதலை கொண்டுள்ளது. எனவே இரண்டு உயர்தர அணிகள் விளையாடுவதால் இந்த தொடர் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என கூறியிருக்கிறார்.

- Advertisement -