இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி வெற்றிக்கு மிக அருகில் நெருங்கி இருக்கிறது.
இன்று மூன்றாவது நாள் போட்டியை தொடர்ந்த இந்திய பேட்ஸ்மேன்கள் சுப்மன் கில் 119*, ரிஷப் பண்ட் 109 ரன்கள் எடுத்தார்கள். இந்தியா அணி கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்த பொழுது டிக்ளேர் செய்தார். இந்திய அணி ஏற்கனவே 227 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.
பங்களாதேஷ் அணிக்கு மெகா இலக்கு
இந்த போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு 515 ரன்கள் மெகா இலக்கை வைத்தது. மேலும் கேப்டன் ரோஹித் சர்மா 20 ஓவர்கள் முன்கூட்டியே டிக்ளர் செய்து விட்டதாக இந்திய ரசிகர் வட்டாரங்களில் விமர்சனங்கள் பரவ ஆரம்பித்திருந்தது. அதே சமயத்தில் இந்த இலக்கை எப்படியும் பங்களாதேஷ் எட்டாது என்று ஒரு நம்பிக்கையும் இருந்தது.
இந்த நிலையில் பங்களாதேஷ் துவக்க ஆட்டக்காரர்கள் மிகச் சிறப்பாக விளையாடிய அரை சதம் பார்ட்னர்ஷிப் கடந்தார்கள். இதைத்தொடர்ந்து ரோஹித் சர்மா தாமதமாக டிக்ளர் செய்திருக்க வேண்டும் என்கின்ற பேச்சுகள் அதிகரிக்க ஆரம்பித்தது. இந்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் அபாரமான கேட்ச் பிடிக்க ஜாகிர் ஹசன் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதிக்கம்
பும்ரா முதல் சரிவை பங்களாதேஷ் அணிக்கு ஏற்படுத்திக் கொடுக்க அதை நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். ஷத்மன் இஸ்லாம் 35, மோமினுல் ஹக் 13, முஷ்பிக்யூர் ரஹீம் 13 ரன்கள் என மூன்று விக்கெட்டுகளை தொடர்ந்து அஸ்வின் கைப்பற்றினார்.
இந்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ வெளிச்சம் கிடைக்காததால் நடுவர்கள் போட்டியை முடித்துக் கொண்டார்கள். இன்று மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் பங்களாதேஷ் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருக்கிறது. பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு இன்னும் 357 ரன்கள் தேவைப்பட கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருக்கிறது.
இதையும் படிங்க : 53 ஆண்டுகளில் முதல் முறை.. ரஷீத் கான் ஸ்பெஷல் சாதனை.. பும்ரா ஸ்டார்க் கூட செய்யாத விஷயம்
மேலும் இன்று காலை மழை பெய்திருந்த காரணத்தினால் அடுத்த இரண்டு நாட்களும் மழை பெய்தால் போட்டி டிராவில் முடியும் ஆபத்து இருப்பதால், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா போட்டியை முன்கூட்டியே டிக்ளர் செய்ததாக கூறப்படுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி ஏறக்குறைய வெற்றியை 50 சதவீதத்திற்கும் மேல் நெருங்கி விட்டது என்று கூறலாம்.