பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பீல்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்ட நான்கு இந்திய வீரர்களை இந்திய பீல்டிங் கோச் டி.திலீப் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த பொழுது டி திலீப் பீல்டிங் பயிற்சியாளராக கொண்டுவரப்பட்டார். பிறகு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து வெளியேறிய பொழுது, அவருடன் வந்த மற்ற பயிற்சியாளர்களும் வெளியேறினார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தால் டி.திலீப் மட்டும் தக்க வைக்கப்பட்டார்.அவருடைய அணுகுமுறை அணிக்குள் கொண்டு வந்த சில கலாச்சாரங்கள் நிர்வாகத்திற்கு மிகவும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நான்கு முக்கிய வீரர்கள்
இது குறித்து பேசி இருக்கும் டிmதிலீப் கூறும் பொழுது ” ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பான அத்லெட்டிக் திறமையையும், வேகமான ரிப்ளக்ஷனையும் சிறப்பாக வெளிப்படுத்தினார். அவர் கல்லி மற்றும் ஷார்ட் லெக்கில் எடுத்த இரண்டு கேட்ச் மூலமாக நாங்கள் ஈர்க்கப்பட்டோம். கேஎல்.ராகுல் பில்டிங் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. நெட் ஆன் திசையில் விரைவாக அவர் பிடித்த ஒரு கேட்ச் சிறப்பானது”
“சென்னை வெயிலில் மோசமான சூழ்நிலையில் வேகப்பந்துவீச்சாளராக இருந்தும் சிராஜ் மிகத் திறமையான பீல்டிங்கை வெளிப்படுத்தினார். அவர் டைவ் செய்து கடினமான கேட்ச் எடுக்க எப்பொழுதும் தயாராக இருக்கிறார். விராட் கோழி எப்பொழுதும் தீவிரமான அர்ப்பணிப்புடன் பீல்டிங்கில் இருக்கக்கூடியவர். பயிற்சியிலும் அப்படியே இருப்பார். அவர் இளம் வீரர்களுக்கு இந்த விஷயத்தில் ஊக்க சக்தியாக இருக்கிறார்”
யாருடையது சிறந்த பீல்டிங்?
மேலும் தொடர்ந்து பேசிய டி.திலீப் “இதை கொஞ்சம் வெளிப்படையாக கூறுவது எனக்கு கடினமாக இருக்கிறது. ஆனாலும் கல்லி மற்றும் ஷார்ட் லெக்கில் ஜெய்ஸ்வால் பிடித்த இரண்டு கேட்ச் அவரை சிறந்த பீல்டர் என்ற இடத்திற்கு இந்த போட்டியில் கொண்டு செல்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது”
இதையும் படிங்க :டிப்பர் லாரிக்கும் மெர்சிடஸ் பென்சுக்கும் வித்தியாசம் இல்லையா?.. பும்ரா கோகினூர் வைரம் – அஸ்வின் கருத்து
ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த பீல்டரை அணி முன்னிலையில் கௌரவிப்பது மூலமாக பீல்டிங் பற்றி வீரர்களுக்கு ஆர்வத்தை டி திலீப் ஏற்படுத்தினார். இது அணிக்குள் தற்பொழுது ஒரு கொண்டாட்ட கலாச்சாரத்தையும் கொண்டு வந்திருக்கிறது. மேலும் களத்தில் புதிய பயிற்சி முறைகளையும் கொண்டு வந்து வீரர்களை சிறப்பாக தயார் செய்திருக்கிறார். இதன் காரணமாகவே கம்பீர் தலைமையிலும் இவர் தக்கவைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.