எங்களோட ஸ்கொர் போதும்ன்னு நெனச்சு உள்ளே வந்தேன்; இஷான் கிஷன்-ஸ்கை போட்டியை எங்களிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டார்கள் – தோல்விக்கான காரணத்தை பேசிய ஷிகர் தவான்!

0
4331

எதிர்பார்த்த அளவிற்கு பந்துவீச்சில் செயல்படவில்லை. இஷான் கிஷன் – சூரியகுமார் வீசும் இருவரும் இணைந்து எங்களிடம் இருந்து ஆட்டத்தை எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்று பேசினார் ஷிகர் தவான்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு, லிவிங்ஸ்டன் 82 ரன்கள், ஜித்தேஷ் சர்மா 49 அடித்துக்கொடுக்க இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இமாலய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிசன் 75(41) ரன்கள், சூர்யகுமார் யாதவ் 66(31) ரன்கள் விளாசி மிடில் ஆர்டரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த, கடைசியில் வந்த திலக் வர்மா(26), டிம் டேவிட்(19) இருவரும் போட்டியை 18.5 ஓவர்கள் பினிஷ் செய்து கொடுத்தனர்.

20 ஓவர்களில் நான்கு விக்கெட்ஸ் இழப்பிற்கு 216 ரன்கள் அடித்து, ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 214 ரன்கள் அடித்தும் தோல்வியை தழுவிய விரக்தியில் பேட்டி அளித்த ஷிகர் தவான் பேசுகையில்,

“நாங்கள் அடித்த ஸ்கோர் போதுமானது என்று நினைக்கிறேன். பந்துவீச்சில் சரியாக செயல்படவில்லை. இன்னும் சரியான லைன் மற்றும் லெந்த்தில் பந்து வீசியிருக்க வேண்டும்.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் இருவரும் எங்களிடம் இருந்து ஆட்டத்தை பறித்து விட்டார்கள். இன்னும் அழுத்தம் கொடுத்து அவர்களுக்கு பந்து வீசியிருக்க வேண்டும்.

இந்த பிட்சில் வேகத்தை மாற்றிமாற்றி வீசும் வீரர்கள் தேவை என்று நினைத்து ரபாடாவை வெளியில் அமர்த்தி நாதன் எல்லிஸ் உள்ள எடுத்துவந்தேன். இன்று அவர் மிகச்சிறப்பாக செயல்பட்டார். மற்ற பந்துவீச்சாளர்கள் அவர்களது தரத்திற்கு செயல்பட்டிருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை.

இன்று ஸ்பின்னர்களுக்கு சிறிது நேரம் கழித்து பவுலிங் கொடுக்கலாம் என்று இருந்தேன். ஆனால் கடைசியில் பனிப்பொழிவு வந்துவிட்டால் என்ன செய்வது என்று முன்னரே கொடுத்துவிட்டேன். என்னுடைய சிறந்த பவுலர்களுக்கு நான்தான் பக்கபலமாக இருக்க வேண்டும். அவர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் அதை செயல்படுத்தி கொடுப்பார்கள்.” என்றார்.