இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரையும் முழுமையாக கைப்பற்றியுள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சில் கலக்கிய இங்கிலாந்து அணியின் கஸ் அட்கின்சன் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இலங்கை அணி வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சில் 427 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி 143 ரன்கள் குவித்து அசத்தினார். இதற்குப் பிறகு முதல் இன்னிங்ஸ் தொடங்கிய இலங்கை அணிக்கு வரிசையாக விக்கெட்டுகள் விழ 196 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. பின்னர் 231 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய இங்கிலாந்து அணி 251 ரன்கள் குவித்தது. இதிலும் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 103 ரன்கள் குவித்து அசத்தினார்.
அதற்குப் பிறகு 482 ரன்கள் வெற்றி இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கருணரத்னே 55 ரன்கள் குவித்து ஆறுதல் அளிக்க மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரை அனைவரும் தடுமாற்றமாக விளையாடி வெளியேறினார்கள். அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் சண்டிமல் மற்றும் கேப்டன் தனஞ்செயா ஆகியோர் இலங்கை அணியை ஓரளவு காப்பாற்றினர்.
மேத்யூஸ் 36 ரன்களும், சண்டிமல் 58 ரன்கள் குவிக்க கேப்டன் தனஜெயா 71 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். இதற்குப் பிறகு இறுதிக்கட்டத்தில் மிலன் ரத்நாயக்கே 56 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். இதனால் 86.2 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 292 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையும் படிங்க:என் மகன் யுவராஜ் சிங் வாழ்க்கையை கெடுத்த.. தோனியை மன்னிக்க மாட்டேன்.. கண்ணாடில பாரு – யோக்ராஜ் சிங் பேட்டி
பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் கஸ் அட்கின்சன் 16 ஓவர்கள் வீசி நான்கு ஓவர்கள் மெய்டனுடன் 62 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் வோக்ஸ், ஒல்லி ஸ்டோன் தலா இரண்டு விக்கெட்டுகளும் பஷீர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இதனால் இங்கிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக கைப்பற்றியுள்ளது. 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை லார்ட்ஸ் மைதானத்தில் தோல்வி அடையவில்லை. அதற்குப் பிறகு நடைபெற்ற ஐந்து டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிவடைய 33 வருடங்கள் கழித்து இப்போதுதான் இலங்கை அணி தோல்வி அடைந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது