இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி வருகிற ஆறாம் தேதி நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டனான ஒல்லி போப் குளிர் காலத்தில் ஏற்பட்ட தோல்விகளும், கோடை காலத்தில் வரும் வெற்றிகள் குறித்தும் தனது கருத்துக்களை கூறுகிறார்.
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து ஐந்து விக்கட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. இரண்டாவது டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட் சதம் அடித்து அசத்தியிருக்கிறார். முதல் இன்னிங்ஸ் 143 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 103 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார்.
ஆனால் இங்கிலாந்து அணியின் தற்போதைய கேப்டனாக செயல்பட்டு வரும் ஒல்லி போப் இரண்டு டெஸ்டின் நான்கு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 6,6,1,17 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார். நான்கு இன்னின்ஸ்கள் சேர்த்து மொத்தமாக 30 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். தற்போதைய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆக செயல்பட்டு வருவதால் கேப்டன்சி அழுத்தம் அவர் மீது விழுந்திருப்பது போல தோன்றுகிறது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் வெற்றி குறித்து போப் கூறும் போது “கிரிக்கெட்டை பொருத்தவரை பேட்டிங் ஃபார்ம் என்பது சில சமயங்களில் அப்படித்தான் வந்து போகும். ஆனால் அதற்கு கீழ் அடிக்கோடிட்டு விளையாட கூடியவர்களே சிறந்த வீரர்கள். இனி வரும் போட்டிகளில் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன். இந்தத் தொடர் நடைபெறுவதற்கு முன்னதாக ஸ்டோக்ஸ் உடன் பேசுவது, நீங்கள் கேப்டனாக இருப்பதால் அதிகம் ஈர்க்கப்படுகிறோம்.
என்னை சுற்றியுள்ளவர்களுக்கு நெருக்கமாக இருப்பது என்பது மிகவும் முக்கியம். நிறைய கருத்துக்கள் வெளி வருகின்றன. நிறைய தோழர்களும், கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அது முற்றிலும் பரவாயில்லை. ஒவ்வொருவருக்கும் தனது கருத்துக்களை கூறுவதற்கு உரிமை உண்டு. கோடை காலத்திற்குப் பிறகு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இதையும் படிங்க:45 வருடம்.. அடுத்தடுத்து 4 முறை.. இங்கிலாந்து அட்கின்சன் மாஸ் சாதனை.. இலங்கை பரிதாப தோல்வி
ஆறாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் அதனை செய்ய முடிந்தால் அது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயமாக இருக்கும். இந்தியாவில் கடுமையான குளிர்காலத்தில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு கோடைகாலத்தில் வெற்றி பெற்று வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் மீண்டும் போட்டிகளை வென்று பழகுவது சுவாரசியமாளிக்கக் கூடிய வகையில் உள்ளது” என்று கூறியிருக்கிறார்.