இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தற்போது கிரிக்கெட்டில் ஆல் பார்மட் பெஸ்ட் பேட்ஸ்மேன் யார்? என்ற கேள்விக்கு எதிர்பார்க்காத ஒரு வீரரை தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
பொதுவாக உலக கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் மிகச் சிறப்பாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேனாக எல்லா நேரத்திலும் விராட் கோலி இருந்து வந்திருக்கிறார். பிறகு சிறிது காலம் அந்த இடத்தில் பாபர் அசாமை வைத்து பேசினார்கள். தற்போது அவர் பேட்டிங் ஃபார்ம் சரிந்து வெளியேறிவிட்டார். ஆனால் இப்பொழுதும் விராட் கோலி மூன்று வடிவத்திலும் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார்.
இந்திய கேப்டன் ரோகித் சர்மா
இதற்கு அடுத்து மூன்று வடிவத்திலும் விளையாடக்கூடியவராக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இருக்கிறார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சமீபத்தில் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் கூட ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து தற்பொழுது விலகி இருக்கிறார். குறிப்பாக இங்கிலாந்து டி20 அணியில் அவர் பெயர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதே கிடையாது. எனவே அவர் இரண்டு வடிவத்தில் மட்டுமே விளையாடக்கூடிய வீரராக மாறிவிட்டார்.
இவர்தான் ஆல் ஃபார்மேட் பெஸ்ட் பேட்ஸ்மேன்
இந்த நிலையில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தற்போது யார் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார்கள் என்று தினேஷ் கார்த்திக் இடம் ஒரு கிரிக்கெட் நிகழ்ச்சியில் கேள்வி முன் வைக்கப்பட்டது. அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியா துவக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட்டை தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தினார்.
இதையும் படிங்க : 3 சதம்.. ருதுராஜுக்காக கம்பீர் போட்ட ஆஸி திட்டம்.. இடையில் வந்த அபிமன்யு ஈஸ்வரன்.. திடீரென மாறும் நிலைமைகள்
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “டிராவிஸ் ஹெட் கொஞ்சம் முன்னால் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாட செய்கிறார் ஆனால் இன்னும் அவருக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. எனவே இந்த நேரத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஹெட் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்று நான் கூறுவேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.