இந்திய கேப்டன் பதவிக்கு.. இந்த 2 பேர் இனி கனவு காண வேண்டாம் – தினேஷ் கார்த்திக் ஓபன் பேச்சு

0
472
DK

தற்போது இந்திய கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திற்கும் எதிர்கால கேப்டனாக சுப்மன் கில்லை கொண்டுவர இந்தியா கிரிக்கெட் அணி நிர்வாகம் விரும்புகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட இரண்டு இந்திய வீரர்கள் இனி இந்திய கேப்டன் பதவிக்கு கனவு காண வேண்டாம் என தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

இந்திய அணி அடுத்த கட்ட எதிர்கால வீரர்களுடன் அடுத்த 10 ஆண்டுகளுக்கு செல்வதற்கு தயாரான நிலையில் இருக்கிறது. எனவே இது குறித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சில தைரியமான தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறது. தற்போது அதற்கான சில முதல் முயற்சிகளை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் எடுத்து வருகிறது.

- Advertisement -

துலீப் டிராபி 2024

இந்த வருடம் துலீப் டிராபி ஏ,பி,சி,டி என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இந்த நான்கு அணிகளுக்கும் கேப்டனாக சுப்மன் கில் அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் என நான்கு வீரர்கள் கேப்டன்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதே சமயத்தில் இந்த தொடரில் விளையாடும் ரிஷப் பண்ட் மற்றும் கேஎல்.ராகுல் இருவருக்கும் கேப்டன் பொறுப்பு எந்த ஒரு அணிக்கும் கொடுக்கப்படவில்லை. கேஎல்.ராகுல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் இந்திய அணியை ஏற்கனவே வழி நடத்தி இருக்கிறார். டி20 வடிவத்தில் ரிஷப் பண்ட் இந்திய அணியை வழிநடத்தியிருக்கிறார். இருந்த போதும் இவர்களை கேப்டனாக கொண்டு வர இந்திய கிரிக்கெட் வாரியம் நினைக்கவில்லை.

- Advertisement -

கனவு காண வேண்டாம்

இது பற்றி கருத்து தெரிவித்திருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது இந்த வீரர்கள் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பெறுவதற்கு தங்களை தயார் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாகவும், இதன் காரணமாக இனி இந்திய கேப்டன் பதவி இவர்களுக்கு செல்லாது எனவும், எனவே அது குறித்த கனவுகள் எதுவும் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் பலவீனத்தை.. வெளிச்சம் போட்ட தமிழக அணி.. கம்பீர் வாய்ப்பை நிறுத்துவாரா?.. என்ன நடந்தது?

இது குறித்து தினேஷ் கார்த்திக் பேசும்பொழுது “இந்த இடத்தில் இருந்து அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி வரையில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருக்கப் போகிறார். மேலும் துணை கேப்டனாக பும்ரா இருப்பார். இப்பொழுது கேஎல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் தங்களை இந்திய அணிகளும் வைத்துக் கொள்வதற்கு தயாரிப்புகளை செய்ய வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள். எனவே கேப்டன் பதவி குறித்து யோசிக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -