ஆஸ்திரேலிய டெஸ்ட் சீரிஸ்.. இந்த 27 வயது புதிய இந்திய வீரர் விமானத்தில் இருப்பார் – தினேஷ் கார்த்திக் உறுதி

0
697
Akash

அடுத்த மாதம் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு செல்ல இருக்கும் இந்திய அணியில் ஒரு குறிப்பிட்ட இளம் புதிய வீரருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என தினேஷ் கார்த்திக் உறுதியாக கூறியிருக்கிறார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இந்த முறை பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் 5 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்படுகிறது. மேலும் இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நவம்பர் 22ஆம் தேதி அதிவேக பெர்த் மைதானத்தில் துவங்குகிறது.

- Advertisement -

முக்கியமான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்

இந்தியாவில் டெஸ்ட் தொடர் விளையாடும் பொழுது நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் 15 பேர் கொண்ட அணியில் கட்டாயம் இடம் பெறுவார்கள். சுழல் பந்துவீச்சுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதே சமயத்தில் ஆசியா தாண்டி வெளியில் செல்லும்பொழுது வேகப்பந்து வீச்சு குழுவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தற்பொழுது ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் பும்ரா, சிராஜ், ஷமி மூவரும் கட்டாயம் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. அதே சமயத்தில் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் தேவையாக இருக்கிறார். மேலும் பேக்கப்புக்காக ஒரு வேகப்பந்துவீச்சாளரும் தேவையாக இருக்கிறார். இந்த இடத்திற்கு யார் என்பது தான் தற்பொழுது பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.

- Advertisement -

மயங்க் யாதவ் வருவாரா?

தற்போது ஆஸ்திரேலியா தொடருக்கு பேக்கப் வேகப்பந்துவீச்சாளராக மயங்க் யாதவுக்கு வாய்ப்பு கிடைப்பதற்கான சூழ்நிலை மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதிவேக பந்துவீச்சாளரான அவரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கொஞ்சம் பாதுகாப்பாக காயத்தில் இருந்து தள்ளி வைக்க விரும்புகிறது.

இதையும் படிங்க : ரிங்கு சிங் இல்லை.. இந்த இந்திய வீரரை ஷாருக் கான் கேகேஆர்ல இருந்து வெளியே விட மாட்டார் – ஆகாஷ் சோப்ரா பேச்சு

இந்த நிலையில் இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “ஆகாஷ் தீப் இதுவரையில் மிகவும் புத்திசாலித்தனமாக பந்துவீச்சில் இருந்திருக்கிறார். அவர் நிச்சயமாக ஆஸ்திரேலியா செல்லும் இந்திய டெஸ்ட் அணியின் விமானத்தில் இருப்பார். இடையில் ஏதாவது காயம்பட்டால் மட்டுமே அவரால் செல்ல முடியாது. மற்றபடி அவரைத் தேர்வு செய்ய மாட்டார்கள் என்பதற்கான எந்த காரணத்தையும் நான் பார்க்கவில்லை” என்று உறுதியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -