ரிங்கு சிங் இல்லை.. இந்த இந்திய வீரரை ஷாருக் கான் கேகேஆர்ல இருந்து வெளியே விட மாட்டார் – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
130
Aakash

இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடர் மெகா ஏலத்தில் ஒரு குறிப்பிட்ட இந்திய வீரரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக் கான் வெளியில் விட விரும்ப மாட்டார் என ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் இருக்கும் 10 அணிகளும் எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் தெரிவிக்கப்பட வேண்டும் என்று செய்திகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் மத்தியில் ஐபிஎல் மெகா ஏலமும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஷாருக் கான் இதைச் செய்ய மாட்டார்

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது ” நீங்கள் எப்பொழுதும் உங்கள் கேப்டனை முதலில் தக்க வைக்க விரும்புவீர்கள். அவர் உங்கள் அனுப்பி வெற்றிகரமான கேப்டனாக இருந்திருக்கிறார். அவருக்கு 18 கோடி ரூபாய் கொடுப்பதாக இருந்தாலும் தக்க வைப்பதுதான் சரி. தற்போது கொல்கத்தா அணியில் கம்பீர் இல்லாத பொழுது ஸ்ரேயாஸ் ஐயரை தக்க வைக்க வேண்டும்”

“நீங்கள் ஆர்டிஎம் மூலம் 18 கோடி ரூபாய் குறைவாக கூட ஸ்ரேயாஸ் ஐயரை வாங்க முடியலாம். ஆனால் கேப்டனை இப்படி செய்யக்கூடாது. ஏனென்றால் இறுதியில் இங்கு எல்லோருமே மனிதர்கள்தான்.எல்லோருக்கும் தனிப்பட்ட உணர்ச்சிகள் உண்டு.ஷாருக் கானை விட மனிதர்களின் உணர்ச்சியை வேறு யார் நன்றாக புரிந்து கொள்ள முடியும்? எனவே அவர் ஸ்ரேயாஸ் ஐயரை வெளியில் விட மாட்டார் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

இவர்கள் சிறந்தவர்கள் ஆனால் வெளியில் விடலாம்

மேலும் பேசிய ஆகாஷ் சோப்ரா “மேலும் அடுத்து நான் இந்திய கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது ரிங்கு சிங் ஏலத்திற்கு வந்தால் அவருக்கு 14 கோடி நிச்சயம் கிடைக்கும். எனவே நாம் அவரை 14 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கலாம். இதற்கு அடுத்து சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரசல் இருவரையும் தக்க வைக்கலாம். என்ன ஒன்று மூன்றாவது வீரருக்கு 11 கோடியும் நான்காவது வீரருக்கு 18 கோடியும் கொடுக்க வேண்டி இருக்கும்”

இதையும் படிங்க: ஹர்திக் பாண்டியா பவுலிங்கில்.. திருப்தி அடையாத கோச் மோர்னே மோர்கல்.. புது மாற்றங்கள் – வெளியான தகவல்கள்

“இத்தோடு நான் நிறுத்திக் கொள்வேன். ஹர்ஷித் ராணா அன் கேப்ட்டு வீரராக இருந்தால் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அப்படி அவர் இருக்க மாட்டார்.மேலும் வரும் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சிறந்த வீரர்கள். ஆனால் அவர்களை ஏலத்தில் விட்டால் நம்மால் தக்க வைப்பதை விட குறைந்த பணத்திற்கு வாங்க முடியும். எனவே இவர்களை விட்டுவிடலாம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -