ஓபனா சொல்றேன்.. இந்திய அணிக்கு இவரை மட்டும் கேப்டன் ஆக்கிடாதிங்க.. காரணம் இதுதான் – தினேஷ் கார்த்திக் விளக்கம்

0
283
DK

தினேஷ் கார்த்திக் மிக வெளிப்படையாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் பதவி கொடுக்கக் கூடாது எனக் கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மேலும் ஏன் கொடுக்கக் கூடாது என்பதற்கான காரணத்தையும் மிக விளக்கமாகவே தெரிவித்திருக்கிறார்.

தற்போது உலகக் கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும்பும்ரா போல ஆதிக்கம் செலுத்தக்கூடிய வேகப்பந்துவீச்சாளர்கள் வேறு யாருமே கிடையாது. மேலும் அவர் இந்திய கிரிக்கெட்டில் மட்டும் இல்லாமல் உலகக் கிரிக்கெட்டில் ஒரு அரிதான பந்துவீச்சாளராக இருக்கிறார்.

- Advertisement -

பும்ராவின் விருப்பம்

பும்ரா தனிப்பட்ட முறையில் இந்திய அணிக்கு கேப்டனாக விருப்பம் கொண்டிருக்கிறார். அவர் ஏதாவது ஒரு வடிவத்தில் கேப்டனாக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனிப்பட்ட முறையில் பந்துவீச்சாளர்கள் சிறந்த கேப்டனாக இருக்க முடியும் என்று பும்ரா கூறியிருந்தார்.

மேலும் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தான் போய் கேட்க மாட்டேன் என்றும், ஏன் ஒரு வேகப்பந்துவீச்சாளரை கேப்டனாக கொண்டுவர விரும்புவதில்லை என்பதை புரிந்து கொள்வதாகவும் தன்னுடைய கருத்துக்களை விரிவாகவே பதிவு செய்திருந்தார்.

- Advertisement -

பும்ரா ஒரு கோஹினூர் வைரம்

தற்போது இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “அவர் குறித்து கூறப்படும் எல்லாமே சரிதான். அவர் மிகவும் கூலாக இருக்கக் கூடியவர். நல்ல மெச்சூரிட்டி கொண்டவர் மற்றும் நல்ல புத்திசாலி. ஆனால் அவர் ஒரு வேகப்பந்துவீச்சாளர். தற்போது அவரை மூன்று வடிவத்திலும் எப்படி பயன்படுத்தி கொள்வது? என்பது தான் தேர்வாளர்கள் முன்னால் இருக்கும் பெரிய கேள்வியாக இருக்கிறது.

பும்ரா போன்ற ஒரு வேகப்பந்துவீச்சாளரின் உடல் தகுதி எப்பொழுதும் கண்காணிக்கப்பட வேண்டும். ஒரு வீரராக அவரைப் பாதுகாத்து வைத்து முக்கிய போட்டிகளில் மட்டுமே விளையாட வைக்க வேண்டும். பும்ராவை பற்றி நான் தொடர்ந்து சொல்வது, அவர் ஒரு கோவில் ஒரு வைரம், நாம் அவரை பாதுகாக்க வேண்டும்.

இதையும் படிங்க : 259 ரன்.. பாஸ்பால் இங்கிலாந்து வேகத்துக்கு.. இலங்கை அணி போட்ட செம பிரேக்.. நாளை மேஜிக் நடக்குமா?

அவரை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளுங்கள். அவர் போட்டிகளுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவர் நீடித்து அணியில் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் பும்ரா எந்த வடிவத்தில் விளையாடினாலும் தாக்கத்தை ஏற்படுத்துவார். அதைத்தான் நாமும் விரும்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -