தற்போது இங்கிலாந்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடைபெற்ற வருகிறது. இந்த போட்டியில் எதிர்பார்த்ததை விட இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்தை கட்டுப்படுத்தி இருக்கிறது.
இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. அந்த அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்பரன்களில் வெளியேறி பெரிய நெருக்கடியை உருவாக்கினார்கள். 113 ரன்களுக்கு அந்த அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து விட்டது.
தனஞ்செய டி செல்வா – மிலன் ரத்னாயகே
இந்த நிலையில் இலங்கை அணியின் கேப்டன் தனஞ்செய டி சில்வா 84 பந்துகளில் 74 ரன்கள், பேட்டிங் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் வந்த அறிமுக வீரர் மிலன் ரத்னாயகே 135 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார்கள். இவர்களால் இலங்கையணி 74 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் 22 ரன்கள் எடுத்திருந்தது. இன்று தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் 18, டான் லாரன்ஸ் 30, ஒல்லி போப் 6, ஜோ ரூட் 42 என வரிசையாக வெளியேறினார்கள்.
ஹாரி புரூக் – ஜேமி ஸ்மித்
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஹாரி புரூக் 76 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கிறிஸ் வோக்ஸ் தாக்குப் பிடித்து விளையாடி 65 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். இன்னொரு முனையில் புது விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் சிறப்பாக விளையாடி இன்று ஆட்டநேரம் முடிவில் ஆட்டம் இழக்காமல் 97 பந்துகளில் அதிரடியாக 72 ரன்கள் கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க : தோனிக்கு நான் அப்படி செஞ்சது தப்புதான்.. நிஜமாவே இதை நான் மறந்துட்டேன் – தினேஷ் கார்த்திக் பேட்டி
இன்று இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை முந்தி 61 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்திருக்கிறது. இலங்கைத் தரப்பில் அசிதா பெர்னாடோ 3, பிரபாத் ஜெயசூர்யா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இலங்கையணி எதிர்பார்த்ததை விட ஓரளவுக்கு இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்தி இருக்கிறது. முக்கிய அதிரடி ஆட்டக்காரர்கள் விக்கெட்டுகளை ஆரம்பத்தில் கைப்பற்றி இருக்கிறது