2018 சிஎஸ்கே அணி கூட்டத்தில் தோனி எழுந்து பேசியதை மறக்கவே முடியாது – ஷேன் வாட்சன் கூறிய முக்கிய நிகழ்ச்சி!

0
1544
Watson

2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஊழல் குற்றச்சாட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்த இரண்டு ஆண்டுகள் மட்டும் குஜராத் மற்றும் புனே அணிகள் இடம் பெற்றன.

இதற்கு அடுத்து 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் ஐபிஎல் தொடருக்கு திரும்பி வந்தன. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கியமான ஆண்டாக இருந்தது!

- Advertisement -

ஆனால் அந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்களையே அதிகம் ஏலத்தில் வாங்கி இருந்தது. இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாடி ஆர்மி என்று வெளியில் கேலி செய்யப்பட்டது.

2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பு நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் மீட்டிங்கில் மகேந்திர சிங் தோனி, எந்த தவறும் வீரர்களான நாங்கள் செய்யாத பொழுது இப்படியான தண்டனை எங்களுக்கு எதற்கு என்று தெரியவில்லை என்று கண்கலங்க பேசி இருந்தார். பின்பு அந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது வரலாறு!

தற்பொழுது அக்காலக்கட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தற்பொழுது இது குறித்து நினைவு கூர்ந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து வாட்சன் பேசும்பொழுது
” 2018 ஆம் ஆண்டு அணி கூட்டத்தில் மகேந்திர சிங் தோனி எழுந்து பேசிய ஒரு சம்பவம் எங்களிடம் இருக்கிறது. அவர் பேசியதை நீங்கள் பார்த்தால் அது அவருக்கு எவ்வளவு அர்த்தமுள்ளது என்று புரியும். மேலும் மீண்டும் சென்னை ஒரு அணியாக இணைய வேண்டியது அவருக்கு எப்படியான அர்த்தமுள்ளதாக இருந்தது என்றும் புரியும். அப்பொழுது பேசிய அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்!” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“முதல் ஆட்டத்தில் நாங்கள் நெருக்கடியில் இருந்த பொழுது பின்னர் டிவைன் பிராவோ அணியை மீட்டு வெற்றி பெற வைத்தார். உடனடியாக எங்கள் அணிக்கு ஒரு நல்ல நம்பிக்கை கிடைத்தது. நாங்கள் நல்ல வீரர்களை பெற்றோம். நாங்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அணிக்குள் நல்ல சூழல் தோனி மற்றும் பிளமிங் இருவரும் உருவாக்கியது. நாங்கள் முடிவுகளைப் பற்றி பேசவில்லை. நாங்கள் எங்களை நாங்களே மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டோம். எங்களிடம் ஏராளமான வீரர்களும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் இருந்தார்கள். அது மிகவும் சிறப்பு வாய்ந்த நேரம்!” என்று பேசி இருக்கிறார்!

தற்பொழுது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் லெஜன்ட்ஸ் கிரிக்கெட் லீக் நடைபெற்று வருகிறது. இதில் தோகாவில் நடைபெறும் ஆட்டத்திற்கு முன்பாக சென்னை அணியில் இடம் பெற்று இருந்த வாட்சன் மற்றும் ஹர்பஜன் இருவரும் தங்கள் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த காலத்தில் நடந்த அனுபவங்களை பகிர்ந்திருந்தார்கள்!