இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும் தனக்குமான உறவு எப்படியானது என்பது குறித்து கூறியிருக்கிறார்.
மகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை எடுத்து பார்க்கும் பொழுது அதில் விராட் கோலியின் பங்கு ஒரு முக்கிய இடத்தை பெறக்கூடியதாக இருக்கிறது. விராட் கோலி களத்திற்குள் வந்தால் ரன் உறுதி என்கின்ற அளவுக்கு அவர் சிறப்பாக இருந்த காலகட்டத்தில், தோனியின் தலைமையின் கீழ் அணியின் வெற்றிக்காக நிறைய சிறப்பான பங்களிப்புகளை கொடுத்திருக்கிறார்.
தளபதி விராட் கோலி
இந்திய அணியின் வெற்றிக்கு பல போட்டிகளில் தனி ஒரு வீரராக விராட் கோலி முக்கியமான காரணமாக இருந்திருக்கிறார். இதன் மூலமாக வெற்றி குறித்த அழுத்தம் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு விராட் கோலியால் நிறைய குறைந்து இருக்கிறது. இந்த வகையில் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான இடம் விராட் கோலிக்கும் இருக்கிறது.
அதே சமயத்தில் விராட் கோலியின் திறமைக்கு பரிசாக தனக்குப் பின்னால் அவரை கேப்டனாக கொண்டு வந்து தோனி கொடுத்தார். இதற்காக தான் கேப்டனாக இருக்கும் பொழுது அவரை துணைக்கு கேப்டனாக பரிந்துரை செய்து, சரியான நேரத்தில் கேப்டன் பொறுப்பை கொஞ்சம் கொஞ்சமாக விராட் கோலி இடம் கொடுத்து, அவரின் தலைமையின் கீழும் எந்தவித சிக்கலும் இல்லாமல் தோனி விளையாடி முடித்தார்.
தம்பியா இல்லை சக வீரரா?
இந்த நிலையில் விராட் கோலிக்கும் தனக்குமான உறவு எந்த மாதிரியானது என்பது குறித்து பேசி இருக்கும் மகேந்திர சிங் தோனி கூறும் பொழுது “நாங்கள் 2008 ஆம் ஆண்டு முதல் ஒன்றாக விளையாடி வந்தோம். எனக்கும் அவருக்கும் இடையில் நிறைய வயது வித்தியாசம் இருக்கிறது. இதன் காரணமாக என்னுடைய இளைய சகோதரர் என்று சொல்லலாமா? இல்லை என்னுடைய சக அணி வீரர் என்று சொல்லலாமா?
இதையும் படிங்க : இந்திய U19 அணிக்கு செலக்ட் ஆனது.. சும்மா இல்லங்க.. ஒரு விஷயம் சொல்றேன் – டிராவிட் மகன் பேட்டி
நீங்கள் இந்த இரண்டில் எப்படி என்ன சொல்ல போகிறீர்கள்? என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் எனக்கு மிகவும் நல்ல சக அணி வீரராக இருந்திருக்கிறார். மேலும் பல காலமாக தொடர்ந்து உலக கிரிக்கெட்டில் தன்னை ஒரு சிறந்த வீரராக அவர் நிலைநிறுத்திக் கொண்டு வந்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.