செப்டம்பர் திட்டம்..இந்திய அணியில் விட்ட இடத்தை பிடிக்க இத செய்ய போறேன் – தேவ்தத் படிக்கல் பேட்டி

0
79
Padikkal

இந்திய இளம் வீரர் தேவ்தத் படிக்கல் இந்திய அணியில் தான் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பேன் எனவும், அதற்கான திட்டம் என்ன எனவும் பேட்டி அளித்திருக்கிறார்.

கர்நாடக மாநில வீரரான தேவ்தத் படிக்கல் தன்னுடைய ஆரம்ப கட்டத்தில் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடி சதம் அடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். இதற்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டில் அவருக்கு பெரிய இடம் இருக்கிறது என எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு எல்லாவற்றையும் புரட்டி போட்டு விட்டது.

- Advertisement -

ராகுல் டிராவிட் ஆரம்பம்

ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியின் கடைசிக்கட்டத்தில் இருந்த பொழுது ராகுல் டிராவிட் தலைமையில் கொரோனா காலத்தில் இந்திய அணி இலங்கைக்கு இரண்டு வெள்ளைப் பந்து தொடர்கள் விளையாட அனுப்பி வைக்கப்பட்டது. அந்த இந்திய அணியில் தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இதற்குப் பிறகு மறு வாய்ப்பு இந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் கொடுக்கப்பட்டது. இதற்கு நடுவில் பெரிய இடைவெளியில் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து மீண்டு வந்து கடந்த வருடம் உள்நாட்டு சீசனில் மிகச் சிறப்பாக விளையாட இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார்.

- Advertisement -

செப்டம்பர் மாதம் துவங்கும் துலீப் டிராபி

இந்த நிலையில் இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுப்பது குறித்து பேசி இருக்கும் தேவ்தத் படிக்கல் “கண்டிப்பாக எனக்கு துலீப் டிராபி மிகவும் முக்கியமான தொடராகும். உங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்காது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். துலீப் டிராபி அதற்கான வாய்ப்பை எனக்கு வழங்குகிறது. கடந்த ஆண்டு எனக்கு உள்நாட்டில் நல்ல சீசன் சிவப்புப் பந்தில் இருந்தது. அது இந்திய அணியில் எனக்கு வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தது. எனவே நிறைய போட்டிகள் இருந்தால், நான் அதை தொடர்ந்து செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : 269 ஸ்ட்ரைக் ரேட்.. 9.2 ஓவர்.. பூரன் மாஸ் பேட்டிங்.. தென் ஆப்பிரிக்கா அணி ஒயிட் வாஷ்.. டி20ல் வெஸ்ட் இண்டீஸ் பதிலடி

நான் தொடர்ந்து முன்னேறுவது மிகவும் முக்கியம். வெளிப்படையாகடெஸ்ட் கிரிக்கெட் உங்களுக்கு சவால் விடுகிறது. இது விளையாடுவதற்கு கடினமான வடிவம். நான் மேம்படுத்தக்கூடிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. எனவே இந்த விஷயங்களில் அடுத்தடுத்து கவனம் செலுத்தப் போகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -