ஒரு ஓவரில் 6 சிக்ஸ்.. 2 சதம்.. ஐபிஎல்-ல் இவர் இருக்கும் அணியில் விளையாட விரும்பறேன் – பிரியன்ஷ் ஆர்யா பேட்டி

0
143
Priyansh

தற்போது நடைபெற்று வரும் டெல்லி பிரிமியர் லீக்கில் இடது கை இளம் பேட்ஸ்மேன் பிரியன்ஷ் ஆர்யா அதிரடியான பேட்டிங்கில் எல்லோரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறார். தன்னுடைய ஐடியல் வீரர் யார்? ஐபிஎல் தொடரில் எந்த அணிக்கு விளையாட விரும்புகிறேன்? என்பது குறித்து கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மெகா ஏலத்துடன் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியா முழுக்க நடைபெறும் மாநில கிரிக்கெட் சங்கங்களின் டி20 லீக்குகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஒரே ஓவரில் 6 சிக்ஸ்

தற்போது நடைபெற்று வரும் டெல்லி பிரிமியர் லீக்கில் சவுத் டெல்லி அணிக்காக விளையாடும் 23 வயதான இடது கை பேட்ஸ்மேன் பிரியன்ஷ் ஆர்யா அதிரடியான பேட்டி மூலமாக பல ரசிகர்களை கவர்ந்து இழுத்து இருக்கிறார். இந்த தொடரில் இரண்டு சதம் அடித்ததோடு ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களையும் அடித்து அமர்க்களப் படுத்தியிருக்கிறார்.

2024 டெல்லி பிரிமியர் லீக்கில் ஒட்டுமொத்தமாக 576 ரன்கள் அடித்து முதல் இடத்திலும், மேலும் தொடரில் இரண்டு சதம் அடித்து அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்திலும், நான்கு அரை சதம் அடித்து அந்தப் பட்டியலிலும் முதலிடத்திலும், 45 பவுண்டரிகள் அடித்து அதிக பவுண்டரிகள் அடித்ததில் முதல் இடத்திலும் என கலக்கிக் கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

இவர்தான் என்னுடைய ஐடியல்

இப்படி டெல்லி பிரிமியர் லீக்கில் அமோக வரவேற்பை பெற்று இருக்கும் பிரியன்ஷ் ஆர்யாவுக்கு இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திலும் பெரிய வரவேற்பு இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் அவர் தான் எந்த அணிக்கு விளையாட விரும்புகிறேன் என்பது குறித்து பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க : ஷேவாக் மாதிரி இருந்தா.. பாபர் அசாம் முன்னேறி வர முடியாது.. சச்சின் மாதிரி அந்த டெக்னிக் வேணும் – ரஷீத் லத்தீப் பேட்டி

இது குறித்து பிரியன்ஷ் ஆர்யா கூறும் பொழுது “என்னுடைய ஐடியல் மற்றும் எனக்கு மிகவும் பிடித்த வீரர் விராட் கோலிதான். அவர் ஆர்சிபி அணியில் இருக்கின்ற காரணத்தினால் நான் ஆர்சிபி அணிக்காக 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புகிறேன். அது நடந்தால் அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -