இந்திய கிரிக்கெட் அணி கடந்த டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது. அது இந்திய அணிக்கு எவ்வளவு மகிழ்ச்சி அளித்ததோ அதே வேளையில் தென்னாப்பிரிக்க அணிக்கு மிகவும் சோகமான முடிவாக அமைந்தது.
இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் கிரிக்கெட் வீரரான டேவிட் மில்லர் இறுதிப் போட்டி தோல்வி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கான டி20 போட்டி ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறும் நிலைமையில் இருந்தது. குறிப்பாக 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலைமையில் முன்னணி பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்தாலும் அதற்குப் பிறகு இந்திய அணி அபாரமான பந்துவீச்சால் 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
2007ம் ஆண்டு மகேந்திர சிங் தோனிக்கு பிறகு 2024 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையில் இரண்டாவது முறையாக இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றது. அது இந்திய ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் எந்த அளவிற்கு மகிழ்ச்சி கொடுத்ததோ அதே நேரத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கும் வீரர்களுக்கும் இன்று வரை அது ஒரு சோகமான நிகழ்வாகவே அமைந்திருக்கிறது. இதுகுறித்து பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து நிலையில் டேவிட் மில்லரும் தற்போது அது குறித்து கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “நான் பலவிதமான விளையாட்டுகளைப் பார்க்கிறேன், அதில் மொமன்டம் எனப்படும் விளையாட்டுத் தன்மை குறித்து எப்போதும் பேசுவேன். ஒரு போட்டியில் விளையாட்டை வெல்வதற்கான தருணங்கள் என்று எப்போதும் இருக்கும். அதுவே ஆட்டத்தை வெல்வதற்கான தருணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அந்தத் தருணம் எனக்கு அமையவில்லை.
நான் எனது நாட்டை வீழ்த்தியது போல உணர்ந்தேன், அது மட்டுமல்லாமல் நான் என்னை வீழ்த்தியது போலவும் என் சக வீரர்களை வீழ்த்தியது போலவும் உணர்ந்தேன். எனவே அது குறித்து விவரிப்பது என்பது கடினமான தருணம் ஆகும். அப்போது நான் வெறுமையாக உணர்ந்தேன். மைதானத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை. இன்னொரு முறை அந்தத் தருணத்திற்கு செல்ல விரும்பினேன்.ஆனால் அதுதான் வாழ்க்கை.
இதையும் படிங்க: பங்களாதேஷ் டி20.. இந்திய அணி அறிவிப்பு.. 156 கி.மீ மயங்க் யாதவுக்கு வாய்ப்பு.. ருதுராஜை புறக்கணித்த பிசிசிஐ
நான் சொன்னது போல இன்னும் நிறைய மக்கள் மற்றும் நிறைய கிரிக்கெட் வீரர்கள் இது போன்ற கடினமான தருணங்களை கடந்து வெற்றி பெற முயற்சித்திருக்கிறார்கள். எனவே அது எனக்கு மட்டுமே நடந்ததாக நினைக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.