நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் வெட்டேரி மற்றும் கேப்டன் கம்மின்ஸ் இருவரும் நிதிஷ்குமார் ரெட்டியை ஒரு விஷயத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என டேல் ஸ்டெய்ன் கூறியிருக்கிறார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 300-க்கும் மேற்பட்ட ரன்களை அதிரடியாக குவித்து இந்திய அணியில் நிதீஷ் குமார் ரெட்டி இடம் பிடித்தார். மேலும் இந்த ஆண்டு அவரை தொடர்ந்து ஹைதராபாத் அணி நிர்வாகம் தக்க வைத்துக் கொண்டது. ஐபிஎல் தொடரில் ஒரே வருடத்தில் அவருடைய வளர்ச்சி மிகப் பெரிய அளவில் அமைந்திருக்கிறது.
யாரும் எட்ட முடியாத இடம்
ஒரே ஒரு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் மட்டுமே இந்திய டி20 அணியில் முதலில் இடம் கிடைத்தது. இதைவிட மிக முக்கியமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவருக்கு இடம் கிடைத்தது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. மேலும் அவர் சிறப்பாக பேட்டிங் செய்து ஆஸ்திரேலியாவில் தன்னுடைய முதல் டெஸ்ட் சதத்தை அடித்து கலக்கினார்.
எனவே அவருடைய எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. இப்படியான நிலையில் அவர் சில காயங்களால் பாதிக்கப்பட்டார். மேலும் தற்போது அவருடைய ஐபிஎல் பேட்டிங் செயல்பாடு மிகவும் சுமாராக மாறியிருக்கிறது. இந்த நிலையில் அவரை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்து டேல் ஸ்டெய்ன் கூறியிருக்கிறார்.
கம்மின்ஸ் இதை மறந்து விட்டீர்களா?
இதுகுறித்து டேல் ஸ்டெயின் ட்விட்டரில் கூறும் பொழுது ” நிதீஷ் குமார் ரெட்டியால் பந்து வீச முடியும் என்பதை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் மறந்து விட்டதா? அவருக்கு கோல்டன் ஆர்ம் இருக்கிறது. நிச்சயமாக ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் வீச முடியும். அந்த அளவிற்கு அவருடைய பந்துவீச்சு மதிப்பு கொண்டதுதான்”
இதையும் படிங்க : அபிஷேக் சர்மாவுக்கு அறிவுரை சொன்ன ரோகித்.. கோபப்பட்ட சேவாக்.. களத்தில் என்ன நடந்தது?
” நிதீஷ் குமார் அடிக்கு காயம் என்றால் நம்மால் ஏதாவது புரிந்து கொள்ள முடியும். அவர் பந்து வீசாமல் இருப்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் தற்போது அவர் எல்லா போட்டிகளிலும் முன் வரிசையில் பேட்டிங் செய்ய வருகிறார். இந்த நிலையில் அவர் பந்து வீசாதது ஏன் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே கம்மின்ஸ் மற்றும் பெட்டேரி அவரை பந்து வீச வைக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.