ரோகித்துக்கே ஐடியா குடுத்திருக்கேன்.. இந்த வீரருக்கு முழு சப்போர்ட் பண்ண போறேன் – சூரியகுமார் யாதவ் பேட்டி

0
343
Surya

இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நாளை தொடங்க இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக யார் களமிறங்குவார்கள் என்பது குறித்து கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறியிருக்கிறார்.

தற்போது பங்களாதேஷ் டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக அபிஷேக் சர்மா மட்டுமே இருக்கிறார். கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவருக்குமே ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ருதுராஜை தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இவர்தான் தொடக்க ஆட்டக்காரர்

நாளை முதல் போட்டி நடக்க இருக்கும் நிலையில் சம்பிரதாய பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் சூர்யா குமார் யாதவ் கலந்து கொண்டார். இதில் பல விஷயங்கள் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. துவக்க ஆட்டக்காரர் யார் மற்றும் கேப்டன்சி பொறுப்பு எப்படி? இருக்கிறது என்பது குறித்து பதில் அளித்து இருக்கிறார்.

சூரியகுமார் யாதவ் கூறும்பொழுது “பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடர் முழுவதிலும் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக எங்களுக்கு இருப்பார். மேலும் இந்த ஆடுகளும் தாழ்வான பவுன்ஸ் கொண்டதாகவோ அல்லது மெதுவாகவோ இருக்கும் என்று நாங்கள் எதுவும் நினைக்கவில்லை. டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்த விக்கெட் நன்றாகவே இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மாவுக்கும் ஐடியா கொடுத்திருக்கிறேன்

மேலும் பேசிய சூரியகுமார் யாதவ் “இது ஒரு புதிய சவால். இங்குள்ள கண்டிஷன் மற்றும் ஆடுகளம் பற்றி எங்களுக்கு தெரியும். இரவில் பனி வருமா? என்பது குறித்து கூட நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாவற்றுக்கும் எங்களிடம் திட்டங்கள் இருக்கிறது. எல்லோரும் பங்களித்தால் உங்களுக்கு பலன்கள் கிடைக்கும்”

இதையும் படிங்க : பங்களாதேஷ் டி20.. ஷிவம் துபே ரூல்டு அவுட்.. மும்பை வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. மாறிய நிலவரங்கள்

“இந்த புதிய பொறுப்பான கேப்டன் பொறுப்பை நான் மிகவும் ரசிக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா தலைமையின் கீழ் விளையாடி வந்த பொழுதும் நான் என்னுடைய ஐடியாக்களை அவரிடம் கூறியிருக்கிறேன். மேலும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கு கேப்டனாக இருந்திருக்கிறேன். மற்ற கேப்டன்கள் எப்படி அணியை முன்னோக்கி கொண்டு சென்றார்கள் என்று அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -