டி20 உலக கோப்பை பைனல்.. கடைசியில ரிஷப் பண்ட் செஞ்ச அந்த காரியம்தான் மாத்துச்சு – ரோகித் சர்மா பாராட்டு

0
953
Rohit

2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் இருந்த சமயம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் செய்த ஒரு காரியம் வெற்றிக்கு மிக முக்கியமாக அமைந்தது என கேப்டன் ரோஹித் சர்மா கூறியிருக்கிறார்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடைசி டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியது. தோற்கவே முடியாத ஒரு இடத்தில் இருந்து தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணிக்கு 13 வருடம் கழித்து உலகக் கோப்பை கிடைத்தது.

- Advertisement -

30 பந்துக்கு 30 ரன்

தென் ஆப்பிரிக்க அணி கைவசம் 6 விக்கெட்டுகள் இருக்க 30 பந்துக்கு 3 ரன்கள் எடுத்தால் டி20 உலகக் கோப்பையை வெல்லலாம் என்கின்ற நல்ல வாய்ப்பில் இருந்தது. பேட்டிங்கில் செட் ஆகி இருந்த கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் இருந்தார்கள். எனவே தென் ஆப்பிரிக்கா அணி டி20 உலகக் கோப்பையை வெல்வது உறுதி என்று எல்லோரும் நினைத்தார்கள்.

இப்படியான நிலையில் 16வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீச வருவதற்கு முன்பாக, காலில் காயம் என்று கூறி ரிஷப் பண்ட் மைதானத்தில் விழுந்தார். உடனே இந்திய பிசியோ மைதானத்திற்குள் விரைந்து வந்து சிகிச்சை அளித்தார். இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. பிறகு 16வது ஓவரின் முதல் பந்தில் கிளாசன் அவுட் ஆனார். அங்கிருந்து இந்தியா அணி ஆச்சரியப்படத்தக்க வகையில் செயல்பட்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

ரிஷப் பண்ட் செய்த புத்திசாலித்தனமான காரியம்

இது குறித்து ரோகித் சர்மா கூறும் பொழுது ” தென் ஆப்பிரிக்காவுக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டது. இப்படியான நிலையில் ரிஷப் பண்ட் புத்திசாலித்தனமாக செயல்பட்டு ஆட்டத்தின் வேகத்தை குறைத்து விட்டார். அவருக்கு காலில் காயம் இருந்தது அதற்கு டேப் சுற்றி இருந்தார். ஆனால் ஆட்டம் வேகமாக இருந்ததால் காயம் என்று கூறி ஆட்டத்தின் வேகத்தை குறைத்தார். இதனால் அவர்களது ரிதத்தை உடைக்க வேண்டி இருந்தது. ரிஷப் பண்ட் அதை செய்ய நான் பவுலர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்”

இதையும் படிங்க : ரோகித்துக்கே ஐடியா குடுத்திருக்கேன்.. இந்த வீரருக்கு முழு சப்போர்ட் பண்ண போறேன் – சூரியகுமார் யாதவ் பேட்டி

“திடீரென ரிஷப் பண்ட் மைதானத்தில் விழ பிசியோ உள்ளே வந்து சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார். ஆட்டம் நிறுத்தப்பட்டது. எனவே மீண்டும் போட்டி தொடங்கும் வரை கிளாசன் காத்திருந்தார். பிறகு அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார். இதுதான் எங்களது வெற்றிக்கு காரணம் என்று நான் கூறவில்லை. ஆனால் இதுவும் ஒரு காரணமாக இருந்தது. ரிஷப் பண்ட் தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தினால் விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக நடந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -