நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நியூயார்க் நாசாவ் மைதானத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கும் பெரிய போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா போட்டி குறித்து பேசி இருக்கிறார்.
பொதுவாக உலகக் கோப்பை தொடர்களை எடுத்துக் கொண்டால் ஒரே ஒரு முறை மட்டுமே பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற்று இருக்கிறது. அந்த வெற்றியும் சமீபத்தில் 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணிக்கு வந்தது.
இதற்குப் பிறகு இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் மீண்டும் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வென்று வருகிறது. குறிப்பாக உலகக்கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலியின் பேட்டிங் செயல்பாடு யாரும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறது.
இது குறித்து பேசி இருக்கும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறும் பொழுது “நாங்கள் போட்டியை வெல்வதற்கு விராட் கோலி போன்ற ஒருவரை மட்டுமே நம்பி இருக்கவில்லை. அனைவருமே விளையாடி அணி வெற்றி பெற வேண்டும். விராட் கோலி பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடவில்லை. மேலும் அவர் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் அனைவருக்கும் தெரியும் அவர் மதிப்பு மிக்க அனுபவத்தை கொண்டு வருகிறார் என்று.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் முதல் சில போட்டிகளில் ரிஷப் பண்ட் விளையாடுவதை பார்க்கும் பொழுது மனதில் தோன்றியது. அவருக்கு பேட்டிங் வரிசையில் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அவரால் கவுன்டர் அட்டாக் பண்ண முடியும். எனவே தான் முடிவு செய்து அவரை மூன்றாவது இடத்தில் விளையாட வைத்தோம். இதன் காரணமாக எங்களால் ஜெய்ஸ்வாலை விளையாட முடியவில்லை.
இதையும் படிங்க : 39 ரன்னில் ஆல் அவுட்.. 10 பேர் ஒற்றை இலக்கம்.. உகாண்டாவுக்கு எதிரா வெஸ்ட் இண்டீஸ் வெறித்தனம்.. மோசமான சாதனை
பாகிஸ்தான் அணிக்கு எதிராக எதுவும் மாறவில்லை சமீபத்தில் ஆசியக் கோப்பை மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அவர்களுக்கு எதிராக விளையாடியிருக்கிறோம். ஆனால் இது டி20 கிரிக்கெட். இங்கு எதுவும் நடக்கலாம். கடந்த முறை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி தோற்றது. ஆனால் இறுதிப் போட்டியில் விளையாடினார்கள். உங்களுடைய நாளில் யார் யாரை வேண்டுமானாலும் வீழ்த்தலாம்” என்று கூறியிருக்கிறார்.