கம்பீர் இந்த டைப்பான ஆளுதான்.. நான் டீம்ல இதுக்காக என்ன வேணாலும் சொல்லுவேன் – ரோகித் சர்மா ஓபன் பேட்டி

0
23
Rohit

தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கும் கவுதம் கம்பீர் எப்படிப்பட்ட நபர் என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

இந்த ஆண்டு நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையில் மற்றும் ராகுல் டிராவிட் பயிற்சியிலான இந்திய அணி கைப்பற்றி சாதித்தது. அத்துடன் பயிற்சியாளர் பொறுப்புக்கான காலம் முடிய ராகுல் டிராவிட் மேற்கொண்டு பதவிக்கு விண்ணப்பிக்காமல் வெளியேறினார்.

- Advertisement -

தோனிக்கு எதிரான கொள்கை

கேப்டன் பொறுப்பில் தோனி, செய்ய வேண்டிய வேலைகளை சரியாக செய்வதுதான் முக்கியம். வெற்றி தோல்விகளை பற்றி கவலை செய்வது முக்கியம் கிடையாது என்ற கொள்கையை வைத்திருப்பவர்.

அதே சமயத்தில் கம்பீர் இதற்கு நேர் எதிரான கொள்கையை வைத்திருப்பவர். அவருக்கு அனைவரும் எந்த வேலையை செய்தாலும் அதை வெற்றியை நோக்கி மட்டுமே செய்ய வேண்டும்என்று கூறுபவர். மேலும் வெற்றி பெறும் டிரெஸ்ஸிங் ரூம்தான் மகிழ்ச்சியான டிரெஸ்ஸிங் ரூம் என்றும் அதற்காக உழைக்க வேண்டும் என்றும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்த பொழுதே சொல்லிவிட்டார்.

- Advertisement -

கம்பீர் இப்படிப்பட்டவர்தான்

தற்பொழுது புதிய தலைமை பயிற்சியாளர் கம்பீர் பற்றி கூறியிருக்கும் ரோகித் சர்மா பேசும்பொழுது “நாங்கள் பயிற்சியில் வாய்ப்புகளை பார்த்தோம். முன்னதாக ராகுல் டிராவிட் பாய் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தார். தற்பொழுது அந்த பொறுப்பிற்கு கம்பீர் வந்திருக்கிறார். அவர்மிகவும் பிடிவாதமான ஒரு வீரர். அப்படியான சில இன்னிங்ஸ்களை சில போட்டிகளில் அவர் விளையாடியிருக்கிறார்”

இதையும் படிங்க : ஐபிஎல் 2025: 6 வருடம் கழித்து வரும் RTM கார்டு.. அப்படி என்றால் என்ன.?.. இம்முறை புது மாற்றங்கள்.. முழு விவரம்

“நான் சரியாக விளையாடுவதும் மற்றவர்களிடமிருந்து திறமைகளை வெளியில் கொண்டு வருவதுதான் என்னுடைய முக்கியமான வேலை. அதற்காக வீரர்களிடம் நான் என்ன சொல்ல வேண்டும் என்றாலும் சொல்வேன். தற்போது இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம் சூழல் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -