நியூசி 75 ரன் ஆல்அவுட்.. நாங்க இத செஞ்சா.. எங்களை யாராலும் ஜெயிக்க முடியாது – ரஷித் கான் பேட்டி

0
222
Rashid

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை 75 ரன்கள் சுருட்டி ஆப்கானிஸ்தான் அணி அசத்தியிருக்கிறது. இந்த போட்டியில் பெற்ற அபார வெற்றி குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவது என அறிவித்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 46 பந்துகளில் 80 ரன்கள் குவித்து மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார். ஆப்கானிஸ்தான அணி 20 ஓவர்களில் 159 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் பரூக்கி மற்றும் ரஷீத் கான் இருவரும் சுருட்டி வீசினார்கள். இருவரும் தலா நான்கு விக்கெட் கைப்பற்றினார்கள். 15.2 ஓவரில் நியூசிலாந்து அணி 75 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. 84 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்குப் பின் பேசிய கேப்டன் ரஷீத் கான் “நியூசிலாந்து போன்ற பெரிய அணிக்கு எதிராக நாங்கள் பெற்ற இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. இந்த விக்கெட் பேட்டிங் செய்வதற்கு எளிதானது கிடையாது. எங்களின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். பேட் மற்றும் பந்தில் எங்களின் சிறப்பான செயல் திறன் இது. இப்படிப்பட்ட ஒரு அணியை வழிநடத்த நான் பெருமைப்படுகிறேன். நான் மெதுவாக ஆரம்பித்தாலும் எனது செயல் திறன் மகிழ்ச்சி அளிக்கிறது.

- Advertisement -

நாங்கள் முதல் ஆறு ஓவர்களில் 30 ரன்கள் மட்டும் எடுத்தோம். அடுத்து எப்படி கொண்டு செல்வது என்பது பற்றி பேசி செய்தோம். தொடர்ந்து சிறப்பாக விளையாடி ஸ்கோர் போர்டை டிக் செய்து கொண்டே இருந்தோம்.அதுதான் தேவையாகவும் இருந்தது. எங்கள் வந்து வீச்சாளர்கள் திறமையை பயன்படுத்தி பந்து வீசும் பொழுது எங்களை வெல்வது யாருக்கும் மிகவும் கடினம். நபி வீசிய இரண்டாவது ஓவர் மிகவும் முக்கியமானது. இப்படியான ஒரு விக்கெட்டில் நாங்கள் நிலையான லைன் அண்ட் லென்த்தில் வீச வேண்டும்.

இதையும் படிங்க : 2 விக்கெட் 11 ரன்.. ஹசரங்கா இலங்கை வரலாற்றில் சாதனை.. பரபரப்பான போட்டியில் பங்களாதேஷ் ட்விஸ்ட்

மேலும் வெற்றியோ தோல்வியோ நாம் செய்ய வேண்டிய விஷயங்களை சரியாக செய்ய வேண்டும். முடிவைப்பற்றி நான் எப்பொழுதும் கவலைப்படுவது கிடையாது. பந்துவீச்சில் எங்களுக்கு பரூக்கி மிகச்சிறந்த தொடக்கத்தை கொடுத்து வருகிறார். இரண்டு போட்டியிலும் அவர் பந்து வீசிய விதம் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் தொடர்ந்து அவர் தன்னுடைய பந்துவீச்சில் பணிபுரிந்தால் அவர் இதைவிட இன்னும் திறமையாக வர முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -