.உங்கள் சமையல்காரரை ஒருநாள் அனுப்ப முடியுமா?- ஹர்திக் பாண்டியாவிடம் வாசிம் அக்ரம் கோரிக்கை!

0
178
Wasim akram

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஞாபகத்தில் அதிக நாட்கள் நீடித்து நிற்கும் ஒரு போட்டி இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இந்த திக் திக் போட்டியில் ஒரு பந்து மீதம் இருக்கையில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வெற்றி பெற்றது. இறுதிவரை வெற்றி யாருக்கு என்று எந்த ஒரு இடத்திலும் உறுதியாகாத இந்தப்போட்டியில் இடையில் நடந்த திருப்பங்கள் இந்திய ரசிகர்கள் விரும்பாத ஒன்றாக அமைந்தது.

- Advertisement -

இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணியுடன் ஏற்பட்ட தோல்வியினால், இன்று இலங்கை உடனும் வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் அணிவுடனும் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ரவீந்திர ஜடேஜா காயத்தால் தொடரை விட்டு வெளியேறியது மற்றும் ஆவேஷ் கான் உடல் நிலை சரியில்லாததால் கடந்த போட்டியில் விளையாடாதது இதெல்லாம் இந்தத் தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது.

மேலும் கடந்த போட்டியில் இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு யாரும் எதிர்பார்க்காத வகையில் கீழே இருந்தது. பேட்டிங்கில் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார் அவர் பந்து வீச்சில் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்தார். இது ஆவேஷ் கான் இல்லாத நிலையில் இந்திய அணிக்கு சரிவை உண்டாக்கிவிட்டது. தற்போது இன்று இலங்கை அணியுடன் இரண்டாவது சுற்றின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிரபல வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் இந்திய ஆல் ரவுண்டர் ஆர்டிக் பாண்டியாவிற்கு ஒரு நட்பு கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார். ஹர்திக் பாண்டியாவிடம் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நீங்கள் ஒரு உணவு பிரியரா என்பது தொடர்பாக ஒரு கேள்வியை வைத்திருந்தார்.

- Advertisement -

இதுதொடர்பாக அப்பொழுது பதிலளித்த ஹ்ர்திக் பாண்டியா ” நான் இரவு உணவிற்கு மட்டுமே வெளியே செல்கிறேன். அப்பொழுது என்னுடன் வரும் என் சமையல்காரர் நான் சாப்பிட வேண்டிய உணவுகளை சரி பார்த்துக் கொள்வார். உணவில் இருக்கவேண்டிய கலோரி அளவு மற்றும் இன்ன பிற விஷயங்களை அவர்தான் பார்த்துக் கொள்கிறார். நான் செல்லும் பொழுது முடிந்தவரை அனைத்து உணவகங்களையும் ஆய்வு செய்வேன்” என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்திருந்தார்.

ஹர்திக் பாண்டியாவின் இந்தப் பதில் தான் வாசிம் அக்ரமை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் வாசிம் அக்ரம் ஹர்திக் பாண்டியாவிடம் ” ஹர்திக் பாண்டியா உங்களிடம் எனக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் இருக்கிறது. உங்கள் சமையல்காரரை என்னுடன் ஒருநாள் அனுப்ப முடியுமா? அவர் எனக்கு ஏதாவது நல்ல உணவு சமைத்து தருவார். நான் தொடர்ந்து ஹோட்டலில் சாப்பிடுவதால் நல்ல உடல் நிலை இல்லாமல் இருக்கிறேன்” என்று ஜாலியாக வேண்டுகோள் வைத்திருக்கிறார்!

இன்றைய போட்டி குறித்து பேசியுள்ள ஹர்திக் பாண்டியா ” எனக்கு ஒரு வாய்ப்பு கிடைப்பது முக்கியம் என்று உணர்ந்தேன். எனக்கு இரண்டு பயிற்சி அமர்வுகள் கிடைத்தன. திரும்பி வந்து சிறப்பாக விளையாட உதவி செய்யும். மேலும் இந்த பயிற்சி அமர்வுகள் என்னை புத்துணர்ச்சி ஆக்கியிருக்கிறது. இன்றைய போட்டியில் பழைய அதே தீவிரம் மற்றும் புத்துணர்ச்சியோடு செயல்பட இது உதவும் ” என்று கூறியிருக்கிறார்!