பிசிசிஐ மாஸ் பிளான்.. தேர்வுக்குழுவில் முன்னாள் இந்திய வீரர் சேர்ப்பு.. அகர்கர் குழுவின் முக்கிய நபர் நீக்கம்

0
1013

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர், தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு குழு தலைவராக செயல்பட்டு வரும் நிலையில், புதிய தேர்வுக் குழு உறுப்பினராக இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ரத்ராவை பிசிசிஐ நியமித்துள்ளது.

இந்த நிலையில் அவர் நியமிக்கப்பட்டதற்கான காரணம் குறித்தும் இந்திய கிரிக்கெட் வாரியம் தகவலை வெளியிட்டு இருக்கிறது. இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்தில் டி20 உலக கோப்பைக்கு முன்பாக அஜித் அகர்கர் இந்திய தேர்வுக்குழுவின் புதிய தலைவராக பொறுப்பேற்றார். அவரது தேர்வின் கீழ் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பை வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இந்த சூழ்நிலையில் இந்திய தேர்வுக்குழுவின் உறுப்பினராக ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்த சலில் அன்கோலாவுக்கு பதிலாக இந்தியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் அஜய் ரத்ரா சேர்க்கப்பட்டிருக்கிறார்.

அஜய் ரத்ரா இந்திய அணிக்காக ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 163 ரன்கள் குவித்திருக்கிறார். 115 ரன்கள் இவரது அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது. 99 முதல் தர போட்டிகளில் விளையாடி 4029 ரன்களைக் குவித்திருக்கிறார். முதல் தர கிரிக்கெட்டில் இவரது அதிகபட்ச ரன்கள் 204 ஆகும். 42 வயதான இவரை இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு குழுவின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து புதிய திறமைகளை இந்திய அணிக்காக கண்டறிவார் என்றும் கூறுகிறது.

- Advertisement -

இது குறித்து பிசிசிஐ விரிவாக கூறும்போது “ஒரு தேர்வாளராக உலக அரங்கில் இந்திய அணியை பிரதிநிதிப்படுத்தும் அடுத்த இளம் தலைமுறை கிரிக்கெட் வீரர்களை கண்டறிந்து, அவர்களை ஊக்குவித்து ஆதரிப்பதற்காக தற்போது பணியாற்றி வரும் தேர்வு குழு உறுப்பினர்களோடு அஜய் ரத்ரா இணைந்து பணியாற்றுவார். மேலும் அவரது நுண்ணறிவு சிறந்த இளம் தலைமுறை வீரர்களை கண்டறிந்து, வளர்த்து உயர்ந்த நிலையில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பார்.

மேலும் அவரது செயல்பாடுகள் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்” என்று பிசிசிஐ சமூக வலைதளத்தில் அறிவித்திருக்கிறது. எனவே இனிவரும் காலங்களில் இந்திய அணியின் தேர்வு குழுவில் பணியாற்றுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:WTC 2025 பைனல்.. இடம் தேதி அறிவிப்பு.. அதிர்ஷ்ட மைதானம் கிடைத்ததால் இந்திய தரப்பு மகிழ்ச்சி

இந்திய அணியில் ஏற்கனவே தேர்வு குழு தலைவராக செயல்பட்டுக் கொண்டிருந்த சலில் அன்கோலாவை நீக்கிவிட்டு தற்போது ரத்ராவை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் இளம் திறமைகளுக்கு பஞ்சமே இல்லை. எனவே அவர்களை சரியாக கண்டறிந்து ஆதரித்து இந்திய அணி பெரிய வெற்றிகளைப் பெற உறுதுணையாக நிற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -