பாக் இவரை கழட்டிவிட்டு பெரிய காரியம் பண்ணிருக்கு.. டி20 WCல அவங்க ரெண்டு பேருக்கு செஞ்சத விட பெருசு – பாசித் அலி பேட்டி

0
85

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து அது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக முக்கிய வீரரை கழட்டி விட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறித்து முன்னாள் வீரர் பாஷித் அலி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடும் சூழ்நிலையில் ராவல் பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி யாரும் எதிர்பாராத வகையில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. குறிப்பாக இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.

பேட்ஸ்மேன்கள் பட்டியலில் பாபர் அசாம் முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆகியும், இரண்டாவது இன்னிங்சில் 22 ரன்களும் குவித்து வெளியேறினார். அதேபோல பந்து வீச்சிலும் முன்னணி வீரரான ஷாகின் சா அப்ரிடி 30 ஓவர்கள் பந்து வீசி 3 ஓவர்கள் மெய்டனுடன் 80 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி குறைவான ரன்கள் குவித்ததால் விக்கெட்டுகள் கைப்பற்ற முடியவில்லை.

- Advertisement -

எனவே அடுத்த டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேகப்பந்துவீச்சாளர் சாஹின் சா அப்ரிடியை கழட்டி விட்டுள்ளது. சமீப காலமாக அவர் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதால் இந்த முடிவை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரரான பாசித் அலி அப்ரீடியை கழட்டி விட்டு பெரிய முடிவை எடுத்து இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அப்ரிடியை கழட்டிவிட்டு பெரிய முடிவை மேற்கொண்டு இருக்கிறது. அப்துல் ரசாக் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோரை நீக்கி அதிரடி காட்டியது என்றாலும் இது அதைவிட பெரிய விஷயமாக உள்ளது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத்தின் கைகளை தனது தோள்களில் இருந்து அகற்றியதற்காக அப்ரிடியை நீக்கி இருக்கிறார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:358 ரன்.. ஜோ ரூட் சாதனை சதம்.. கலக்கும் கடைசிக்கட்ட பார்ட்னர்ஷிப்கள்.. இலங்கை டெஸ்டில் இங்கிலாந்து முன்னிலை

இந்த இரண்டு அணிகளுக்கிடையே என இரண்டாவது போட்டி வருகிற 30-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சமீபத்தில் பாகிஸ்தான் அணியின் டி20 உலக கோப்பை மோசமான செயல்பாட்டால் செலக்சன் கமிட்டியில் இருந்து வஹாப் ரியாஸ் மற்றும் அப்துல் ரசாக் ஆகியோர் நீக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -