இந்தியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான துலீப் டிராபியில் இந்தியா டி அணியின் கேப்டன் ஆன ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற இந்தியா ஏ அணியுடன் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் ஏழு பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆகி வெளியேறி இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரரான பாசித் அலி ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் ஃபார்ம் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டு சதங்கள் அடித்து தனது திறமையை வெளிக்காட்டினார். அதற்குப் பிறகு டி20 உலக கோப்பையில் இவர் இடம் பெறாத நிலையில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்று தர முக்கிய காரணமாகவும் அமைந்தார். இருப்பினும் சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் திரும்பிய ஐயர் அந்தத் தொடரில் மொத்தமாகவே 38 ரன்கள் மட்டுமே குவித்து சீரற்ற பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தினார்.
இந்த சூழ்நிலைகள் தற்போது நடைபெற்று வரும் துலீப் டிராபியில் இந்தியா டி அணியின் கேப்டனாக இருந்து வரும் நிலையில் இதுவரை ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் இந்தியா ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜீரோ ரன்னில் டக் அவுட் ஆகி கலீல் அகமதுவின் பந்துவீச்சில் வெளியேறி இருப்பதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் என பாசித் அலி கே எஸ் அய்யர் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஒரு கிரிக்கெட் வீரராக எனக்கு அவரை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நீங்கள் முன்னரே ஆட்டமிழந்து வெளியேறினால் உங்கள் கவனம் விளையாட்டில் இல்லை என்பது போல் தெரிகிறது. குறிப்பாக சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு சரி வர மாட்டார் போல் தோன்றுகிறது. உலகக்கோப்பை தொடரில் இரண்டு சதங்கள் அடித்திருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரை வென்று கொடுத்த கேப்டன். இதை வைத்துப் பார்க்கும்போது இந்த தொடரில் 100 முதல் 200 ரன்கள் எடுத்திருக்க வேண்டும்.
ரகானே மற்றும் புஜாரா ஆகியோர் இதில் விளையாடாததால் அய்யர் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறார். ரெட் பால் கிரிக்கெட் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆர்வமில்லை. அவர் பௌண்டரிகள் அடிப்பதிலேயே குறியாக இருக்கிறார். சிவப்பு பந்து வடிவத்தொடர்க்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இரண்டு சதங்கள் உலகக்கோப்பையில் அடித்த பிறகு விராட் கோலி போல இருக்கிறோம் என்று நினைத்தால் அவருக்கு இது ஒத்து வராது.
இதையும் படிங்க:சேவாக் எனக்கு நல்ல பேட்டிங் பார்ட்னர் கிடையாது.. ஏன்னா களத்துல இப்படித்தான் நடந்தது – பத்ரிநாத் விளக்கம்
அவரை விரும்பும் இந்திய ரசிகர்கள் என்னை மன்னியுங்கள். நான் இந்தியாவின் தேர்வாளராக இருந்திருந்தால் அய்யர் துலீப் டிராபியில் விளையாடி இருக்க மாட்டார் அவர் இந்த வடிவ தொடரை மதிக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.