மோர்கல் மாதிரி கேரி கிர்ஸ்டனை.. பாகிஸ்தான் கோச் பொறுப்புல இருந்து அனுப்பிடுவாங்க – பசித் அலி கருத்து

0
368
Basit

தற்போது பாகிஸ்தான் வெள்ளை பந்து அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கும் கேரி கிர்ஸ்டனை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பதவியில் இருந்து நீக்கிவிடுவார்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியை சர்வதேச கிரிக்கெட்டில் எப்படியாவது மேலே கொண்டு வருவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரும் முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக வெள்ளைப் பந்து மற்றும் சிவப்பு பந்து அணிகளுக்கு தனித்தனியாக பயிற்சியாளர்களை நியமித்திருக்கிறது.

- Advertisement -

கேரி கிர்ஸ்டன் சாதனை

இந்திய அணி மகேந்திர சிங் தோனி தலைமையில் 28 ஆண்டுகள் கழித்து ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை 2011 ஆம் ஆண்டு கைப்பற்றியது. அப்பொழுது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இதே கேரி கிர்ஸ்டன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலைமையில் பாகிஸ்தான் வெள்ளைப் பந்து அணிகளுக்கு தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றதுமே வீரர்கள் மரியாதை தராதது, வீரர்களுக்குள் ஒற்றுமை இல்லாதது என நிறைய பிரச்சனைகளை அவர் சந்தித்து விட்டார். இது குறித்து அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்க, முழு நடவடிக்கை எடுக்க அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

- Advertisement -

கேரி கிர்ஸ்டனை நீக்கிவிடுவார்கள்

மேலும் 2023ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போது தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேத பந்துவீச்சாளரும் தற்போது இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான மோர்னே மோர்கல் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தார். பிறகு தாமாகவே ராஜினாமா செய்து விட்டு விலகி விட்டார்.

இதையும் படிங்க : இரானி கோப்பை 2024.. அணிகள் அறிவிப்பு.. கேப்டனாக ருதுராஜ் ரகானே.. 3 இந்திய அணி வீரர்கள் விடுவிப்பு

இந்த நிலையில் கேரி கிர்ஸ்டன் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி பேசும் பொழுது “கேரி கிர்ஸ்டனுக்கு வாழ்த்துக்கள்.அவர் சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடந்து முடியும் வரை பயிற்சியாளர் பொறுப்பில் இருப்பார். பிறகு அவரை நீக்கிவிடுவார்கள்.நான் இப்போது இதைச் சொல்கிறேன் அவருக்கு டாட்டா பை பை காட்டுவார்கள். ஏனென்றால் பாகிஸ்தானின் டாப் 4 இடத்தை பேட்டிங் வரிசையில் நிரப்புவது மிகவும் சவால் ஆனது. அதில் பெரிய அரசியல் இருக்கிறது. எனவே அதில் வெற்றி பெற முடியாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -