சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரில் வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் வரலாற்று வெற்றியை பதிவு செய்து ஒட்டுமொத்த வங்கதேசத்திற்கும் பெருமை சேர்த்தது.
இந்த சூழ்நிலையில் இந்த வெற்றி வசமான விதம் குறித்து வங்கதேச அணி வீரர் ஷான்டோ சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
வெளிநாட்டு மண்ணில் பெரிய வெற்றிகளை ருசிக்காத வங்கதேச அணி இந்த முறை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் பெரும்பாலும் பாகிஸ்தான் அணியே வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எண்ணினர். ஆனால் அதனை பொய்யாக்கும் விதமாக தங்களது கடின உழைப்பின் மூலமாக எந்த அணியும் வீழ்த்த முடியும் என்று வங்கதேச அணி நிரூபித்தனர்.
முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பின்னர், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு முன்னணி அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுவதுமாக கைப்பற்றி ஒரு வரலாற்று வெற்றியை வங்கதேச அணி பதிவு செய்தது. ஒரு முன்னணி அணிக்கு எதிராக வங்கதேச அணி இத்தகைய வெற்றியை பெற்றதில்லை. இதற்குக் காரணம் வீரர்களின் கடின உழைப்பு மற்றும் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்று நாங்கள் நம்பி அதற்கு தகுந்தவாறு செயல்பட்டோம் என்று வங்கதேச அணி வீரர் நஜ்முல் ஹொஸைன் ஷான்டோ சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றி குறித்து ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் அது நம்பிக்கை மட்டுமே. நீங்கள் வெற்றி பெறும்போது அந்த உணர்வு மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். இந்த தருணங்களை உணர்வு பூர்வமாக அனுபவிக்க வேண்டியது மிகவும் அவசியம். வங்கதேச அணி வரலாறாற்றில் இப்படி ஒரு தருணம் நிகழ்ந்ததில்லை என்று நான் நினைக்கிறேன். வீரர்கள் குறிப்புகளை தேடுகிறார்கள்.
ஆனால் இப்போது எந்த நாட்டிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது. அடுத்த முறை விளையாடும் போது முடிவு எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை மட்டும் எங்களிடம் இருக்கும். அதற்குத் தகுந்தவாறு வீரர்களும் கடினமாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே வெளிநாட்டிலும் எங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:ஆர்சிபி மேட்ச்.. கடவுளே தோனி கோபத்தை.. எங்களால் தாங்க முடியல.. அப்புறம் நடந்ததுதான் மாஸ் – பத்ரிநாத் வெளியிட்ட தகவல்
வங்கதேச அணி அடுத்ததாக இந்திய அணியோடு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. பாகிஸ்தானில் படைத்த வரலாறை போன்று இந்தியாவிலும் வங்கதேசம் வரலாறு படைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்தியப் படை அவ்வளவு எளிதில் எதையும் விட்டுக் கொடுக்காது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்றாகும்.