கிரிக்கெட் வரலாற்றில் நடக்காத சம்பவம்.. பங்களாதேஷ் மோசமான பீல்டிங்.. பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த இலவச ரன்

0
12
Bangladesh

தற்போது பங்களாதேஷ் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியின் மோசமான பீல்டிங் செயல்பாடு தொடர்கிறது.

பொதுவாக எந்த ஒரு விளையாட்டிலும் வீரர்களுக்கு விளையாட்டில் அந்த சூழ்நிலை குறித்தான விழிப்புணர்வு மிக அவசியம். விளையாட்டு விழிப்புணர்வு இல்லாவிட்டால் ஒரு வீரராலோ அல்லது ஒரு அணியாலோ போட்டியில் வெற்றி பெறுவது முடியாத காரியம். குறித்த நேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதற்கான மனநிலை இருக்க வேண்டும்.

- Advertisement -

பங்களாதேஷ் அணியின் பரிதாபம்

நேற்று முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி டாஸ் வென்று முதலில் பதிவு செய்தது. மேலும் அப்துல்லா ஷபிக், கேப்டன் ஷான் மசூத் மற்றும் பாபர் அசாம் என மூன்று முக்கிய விக்கெட்டுகளை 16 ரன்களுக்கு பறித்துவிட்டது. ஆனால் அதற்கு அடுத்து சவுத் ஷகீல் மற்றும் சையும் அயூப் இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து அணியை மீட்டார்கள்.

இந்த நிலையில் இன்று தொடர்ந்து விளையாடி வரும் சவுத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் சிறப்பாக விளையாடி மேற்கொண்டு பங்களாதேஷ் அணியின் பக்கம் இருந்த ஆட்டத்தை மொத்தமாக பாகிஸ்தான் பக்கம் திருப்பிக் கொண்டு வந்து விட்டார்கள். பங்களாதேஷ் அணி தங்களுக்கு கிடைத்த அருமையான தொடக்கத்தை தவறவிட்டது.

- Advertisement -

பள்ளி குழந்தைகளான பங்களாதேஷ் வீரர்கள்

இந்த போட்டியில் இன்று இரண்டாவது நாள் 49 வது ஓவரில் சவுத் ஷகீல் ஒரு பந்தை நேராக அடித்தார். அப்போது மிட் ஆஃப் பகுதியில் நின்று இருந்த ஃபீல்டர் பந்தை டைவ் அடித்து தவறவிட்டார். இதன் காரணமாக பந்து நேராக பவுண்டரி நோக்கி சென்றது.

இப்படியான நிலையில் மிட் ஆன் பகுதியில் நின்று இருந்த இன்னொரு ஃபீல்டர் ஓடி வந்து பிறகு பந்து பவுண்டரிக்கு சென்று விட்டதாக நினைத்து நின்று கொண்டார். அவர் பந்தை தொடர்ந்து விரட்டி செல்லவில்லை. பந்து பவுண்டரிக்கு செல்லும் வேகத்திலும் இல்லை. எனவே பந்து பவுண்டரிக்கு மிக நீண்ட தூரத்திற்கு முன்பாகவே நின்று விட்டது.

இதையும் படிங்க : இங்கிலாந்துக்கு எதிராக.. இந்திய வீரரின் 41 வருட உலக சாதனையை உடைத்த இலங்கை அறிமுக வீரர்

இந்த நிலையில் யாரும் பந்தை துரத்தி செல்லாததால் பாகிஸ்தானின் சவுத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் ஓடியே 4 ரன்கள் எடுத்தார்கள். பங்களாதேஷ் வீரர் பந்தை தொடர்ந்து விரட்டிச் சென்று இருந்தால் இரண்டு ரன்கள் மீதியாகி இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் பந்தை எந்த சூழ்நிலையிலும் துரத்தி சென்று கடைசி நேரத்தில் மட்டுமே வீரர்கள் நிற்பார்கள். ஆனால் பங்களாதேஷ் வீரருக்கு அந்த சாதாரண ஆட்ட விழிப்புணர்வு கூட இல்லை. தற்பொழுது இந்த சம்பவத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -