சென்னை சேப்பாக்கத்தில் பிட்ச் ட்விஸ்ட்.. அதிரடி முடிவெடுத்த இந்தியா.. முதல் பேட்டிங்.. முக்கிய மாற்றம்

0
289
Rohit

இன்று இந்தியா பங்களாதேஷ் மோதிக்கொள்ளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டியில் தொலைநோக்கு பார்வையோடு ஆடுகளத்தை அமைத்து இந்தியா களம் இறங்குகிறது.

இந்த போட்டிக்கான ஆடுகளம் சிவப்பு மண்ணில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல இருக்கின்ற காரணத்தினால், உள்நாட்டில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்து இந்திய அணி தயாராக முடிவு செய்திருப்பது தெரிகிறது.

- Advertisement -

பங்களாதேஷ் எடுத்த முடிவு

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியின் கேப்டன் நஜ்முல் சாந்தோ முதலில் தங்கள் அணி பந்து வீசும் என அறிவித்தார். அவர்களுடைய அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் டஸ்கின் அகமத், ஹசன் மக்மூத் மற்றும் நாகித் ராணா மூவரும் இடம் பெற்றிருக்கிறார்கள். சுழல் பந்துவீச்சாளர்களாக மெகதிசன் மிராஸ் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் இருக்கிறார்கள்.

பங்களாதேஷ் கேப்டன் டாஸ் வென்று பேசும்பொழுது ” நான் முதலில் பந்து வீச விரும்புகிறேன். காரணம் ஆடுகளத்தில் ஈரப்பதம் இருக்கிறது நாங்கள் அதை பயன்படுத்த நினைக்கிறோம். இந்த முதல் செஷன் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய விதம் எங்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் இது ஒரு புதிய தொடர்.நாங்கள் எங்கள் செயல்முறைகளை பின்பற்ற வேண்டும். இது அனுபவமும் இளமையும் கலந்த சரியான கலவை. மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களுடன் செல்கிறோம்” என்று கூறுகிறார்.

- Advertisement -

சூழ்நிலை சவாலாக இருக்கிறது

டாஸ் நிகழ்வில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேசும்பொழுது “டாஸ் வென்று இருந்தால் நானும் முதலில் பந்து வீச முடிவு செய்து இருப்பேன். ஆடுகளம் கொஞ்சம் மென்மையாக காணப்படுகிறது. சூழ்நிலை சவால் ஆனதாக இருக்கும். எனவே நமது திறமையை பின்பற்றி நமக்குத் தெரிந்த முறையில் விளையாட வேண்டும். பத்து டெஸ்ட் போட்டிகள் தொடர்ந்து இருக்கின்றன. ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது.

இருந்த போதிலும் நமக்கு முன்னால் உள்ள போட்டியில் கவனம் செலுத்த விரும்புகிறோம். நாங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு இங்கு வந்து நல்ல முறையில் தயாராகி இருக்கிறோம். பும்ரா சிராஜ், ஆகாஷ் தீப் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா ரவிச்சந்திரன் அஸ்வின் என இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்குகிறோம்+ என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : 632 நாளுக்கு அப்றம் வராரு.. 2021 மாதிரி இல்ல.. இப்போ அவரோட கேம் வேற மாதிரி இருக்கு – பார்த்தீவ் பட்டேல் பேட்டி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய பிளேயிங் லெவன் :

ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கேஎல்.ராகுல், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், பும்ரா, சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப்.

- Advertisement -