இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் வங்கதேச அணிக்கு அடுத்த போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயமான ஒன்றாக இருக்கிறது.
இந்திய அணியுடன் விளையாடுவது குறித்து வங்கதேச அணியின் அனுபவ வீரரான ஷகிப் அல்ஹசன் கூறியிருக்கிறார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முத்திரையை பதித்து வரும் வேளையில், சொந்த நாட்டில் அசைக்கவே முடியாத அணியாக திகழ்ந்து வருகிறது. கிரிக்கெட்டில் வல்லரசு நாடுகளே இந்தியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடி தோல்வி அடைந்து வரும் நிலையில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் ஏற்கனவே தோல்வி அடைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இரண்டாவது போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் வங்கதேச அனுபவ வீரர் ஷகீப் அல்ஹசன் சொந்த மண்ணில் இந்தியா போன்ற வலுவான அணியை வீழ்த்துவது கடினமான செயல் எனவும், முதல் டெஸ்ட் போட்டியை விட இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நன்றாக விளையாடுவது முக்கியம் என சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணியை பற்றி பேசும் போது தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கிறது. மேலும் சொந்த நாட்டில் அவர்களை வீழ்த்துவது கடினமான காரியம். இந்தியாவில் சுமார் 4000 நாட்களாக அவர்கள் தோற்கடிக்க முடியாத அணியாக இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தை அறிந்தேன்.
இதிலிருந்தே அவர்கள் எவ்வளவு வலுவான அணி என்று தெரிகிறது. இந்தியாவிற்கு வெளியேயும் இந்த அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எந்த அணியாக இருந்தாலும் இந்தியாவில் வெற்றி பெறுவது கடினமான காரியம் என்று இருக்கும் நிலையில் அதற்கு நாமும் விதிவிலக்கல்ல.ஆனால் இந்தியாவிற்கு எதிராக நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டியது அவசியம். அதனால் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க: 135 வேகம்.. ஆனா கோலி சார் சரியா ஆடல.. கம்பீர் வந்து எங்கிட்ட இத கேட்டார் – இந்திய அணியின் நெட் பவுலர் பேட்டி
மற்ற நாடுகள் கூட ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் தோல்வி அடைவார்கள். ஆனால் இந்தியா சொந்த நாட்டில் தோல்வி அடைவது என்பது அரிதான காரியம். வங்கதேசத்தில் நாங்கள் இந்தியாவுக்கு எதிராக ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்றோம். மேலும் டெஸ்ட் தொடரில் வெற்றிக்கு மிக அருகில் வந்தோம். நாங்கள் அதில் எதிர்பார்த்த வெற்றி இல்லை என்றாலும் நாளைய போட்டியில் எங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது” என்று கூறியிருக்கிறார்.