நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஷாகிப் அல் ஹசனின் பேட்டிங்கை இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சனம் செய்தது தற்பொழுது பெரிய அளவில் சர்ச்சையாகி வருகிறது. இதற்கு ஷாகிப் அல் ஹசன் பதில் அளிக்க முடியாது எனக் கூறிவிட்ட நிலையில், பங்களாதேஷ் வீரர் இம்ரூல் கேயஸ் இதுகுறித்து விமர்சனம் செய்திருக்கிறார்.
தென் ஆப்பிரிக்கா இன்னைக்கு எதிரான போட்டியில் ஷாகிப் அல்ஹசன் அன்றிச் நோர்க்கியா பந்துவீச்சில் புல் ஷாட் அடிக்க நினைத்து ஆட்டம் இழந்தார். இதனால் பங்களாதேஷ் அணி வெல்ல வேண்டிய போட்டியை தோற்றது. இது அவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் பிரச்சனைகளை உண்டு செய்தது.
இதுகுறித்து பேசி இருந்த சேவாக் “அனுபவத்திற்காக அவரை அணியில் சேர்த்து இருந்தால், அப்படிப்பட்ட அனுபவத்தை அவரிடம் பார்க்க முடியவில்லை. அவர் புல் ஷாட் அடிப்பதற்கு ஹைடன் கில்கிறிஸ்ட் கிடையாது. அவர் பங்களாதேஷ் வீரர். அவரால் ஹூக் மற்றும் புல் ஷாட் அடிக்க முடியாது. எனவே தெரிந்த ஷாட்டை விளையாட வேண்டும் என்று விமர்சனம் செய்திருந்தார்.
இதுகுறித்து ஷாகிப் அல் ஹசனிடம் கேட்ட பொழுது “இதற்கெல்லாம் ஒரு வீரர் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஒரு வீரனுடைய வேலை தம்மால் அணிக்கு என்ன பங்களிப்பை கொடுக்க முடியுமோ அதைத்தான் செய்ய முடியும். இன்று என்னுடைய நாளாக இருக்கலாம் நாளை வேறொரு வீரருடைய நாளாக இருக்கலாம்” என்று முடித்துக் கொண்டார்.
தற்பொழுது இதுகுறித்து இம்ருல் கேயஸ் கூறும்பொழுது “ஷாகிப் ஒரே நாளில் இந்த இடத்திற்கு வந்து விடவில்லை. அவர் இதற்காக கடினமாக உழைத்து உள்ளார். அவர் எல்லா வடிவ கிரிக்கெட்டிலும் ஐசிசி தரவரிசையில் நீண்ட காலம் முதல் இடத்தில் இருந்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு வீரரை பேசும் பொழுது மரியாதை உடன் பேச வேண்டும். ஆனால் சேவாக் மரியாதை கொடுக்கவும் வாங்கவும் தெரியாதவர்.
இதையும் படிங்க : ஆப்கான் இத ஒன்ன மட்டும் சரி பண்ணுங்க.. டி20 உலககோப்பை உங்களுக்குதான் – முகமது கைப் அட்வைஸ்
சேவாக் பங்களாதேஷ் கிரிக்கெட் மற்றும் பங்களாதேஷ் வீரர்கள் பற்றி இப்படி பேசுவது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே அவர் பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாத அணி என்று பேசி இருந்தார். சச்சின் மற்றும் டிராவிட் போன்ற பெரிய பேட்ஸ்மேன்கள் ஒரு அறிக்கையை வெளியிடும் முன்பு அவர்களுக்கு எப்படி மரியாதையாக பேச வேண்டும் என்று தெரியும். ஆனால் இவருக்கு ஏன் அது தெரியவில்லை என்று புரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.