இன்று தொடங்கிய இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஹசன் மக்முத் இப்பொழுது இந்திய அணிக்கு அழுத்தத்தை கொடுத்து பங்களாதேஷ் அணியால் போட்டிக்குள் வர முடியும் என்று கூறியிருக்கிறார்.
தற்போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்திருக்கிறது. களத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் 102 ரன் மற்றும் ரவீந்திர ஜடேஜா 86 ரன்கள் எடுத்து நிற்கிறார்கள். இந்திய அணி 400 ரண்களை எட்டுவதை இப்போது இலக்காக வைத்திருக்கும்.
இந்திய பேட்டிங் வரிசையை உடைத்த ஹசன் மக்முத்
இன்று டாஸ் வென்று முதலில் பந்து வீசிய பங்களாதேஷ் அணிக்கு பந்துவீச்சில் வேகப் பந்துவீச்சாளர் ஹசன் மக்முத் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார். கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் என முக்கிய நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியை பெரிய நெருக்கயில் தள்ளினார்.
இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் சேர்ந்து 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை முதல் இன்னிங்ஸில் கரை சேர்த்திருக்கிறார்கள். இந்த நிலையில் இந்திய அணியின் மீது அழுத்தம் செலுத்தி மீண்டும் பங்களாதேஷ் அணியால் போட்டிக்குள் வர முடியும் என ஹசன் மக்முத் தெரிவித்திருக்கிறார்.
இதைச் செய்தால் போதும்
இதுகுறித்து ஹசன் மக்முத் கூறும்பொழுது ” இந்திய அணியை நானூறு ரன்களுக்குள் ஆல் அவுட் செய்தால் அது நல்லது என்று நினைக்கிறேன். தற்போது கண்டிஷன் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கிறது. ஆடுகளம் தட்டையாக மாறிவிட்டது. நாங்கள் இந்திய அணிக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்”
“எங்களுடைய பந்துவீச்சில் நாங்கள் இன்னும் கொஞ்சம் ஒழுக்கமாக இருந்திருக்கலாம். நாங்கள் சரியான சேனல்களை தாக்கி இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து இருக்கலாம். இந்திய அணி இடம் தற்பொழுதும் மொமண்டம் இருக்கிறது. ஆனால் தாங்கள் முயற்சி செய்தால் அவர்களை 400 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்ய முடியும்”
இதையும் படிங்க : 556 நாட்கள்.. கோலி பெயிலியர் காரணம் இதுதான்.. அது நடந்திருந்தா வேற ஆள பார்த்திருப்போம் – பார்த்திவ் படேல் கருத்து
“நாங்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை எடுத்தால் போட்டிக்குள் மீண்டும் திரும்பி வர முடியும். ஆடுகளம் தட்டையாக இருந்தாலும் கூட சரியான ஒழுக்கத்துடன் பந்து வீசினால் பேட்ஸ்மேன்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். இதன் காரணமாக நாங்களும் பேட்டிங்கில் ரன்கள் குவிக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.