இந்திய அணியை ஜெயிச்சா அது நடக்கும்.. நாங்க ஜெயிப்போம்னு இதனால நம்புறோம் – பங்களாதேஷ் பவுலர் பேட்டி

0
23
Shoriful

பங்களாதேஷ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சோரிபுல் இஸ்லாம் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை பங்களாதேஷ் அணியால் வெல்ல முடியும் எனக் கூறியிருக்கிறார்.

கடந்த வாரத்தில் பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளையும் வென்று அபாரமாக விளையாடி கைப்பற்றியது. இதன் காரணமாக அவர்களுடைய நம்பிக்கை அதிகரித்திருப்பதாகவும் அதனால் இந்திய அணியை வெல்ல முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

வரலாற்று சாதனை வெற்றி

2000ஆம் ஆண்டில் பங்களாதேஷ் முதன்முறையாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் விளையாட அங்கீகாரம் பெற்று இந்திய அணிக்கு எதிராக விளையாடியது. அந்த காலகட்டத்தில் இருந்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட பங்களாதேஷ் அணி வெல்லாமல் இருந்து வந்தது.

இப்படியான நிலையில் தான் பாகிஸ்தான் சென்று அவர்களது மண்ணிலேயே முதன்முறையாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்களை வீழ்த்தினார்கள். மேலும் இரண்டாவது போட்டியையும் வென்று தொடரையும் முதன்முறையாக கைப்பற்றினார்கள். பங்களாதேஷ் கிரிக்கெட் வரலாற்றில் இந்த வெற்றிகளுக்கு மிகப்பெரிய இடம் இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியை வீழ்த்துவோம்

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் சோரிபுல் இஸ்லாம் கூறும் பொழுது “பாகிஸ்தான் அணி உடன் ஒப்பிடும்போது இந்திய டெஸ்ட் அணி மிகவும் அனுபவம் வாய்ந்தது. இந்திய அணி ஒரு பெரிய அணி. நாங்கள் அவர்களை வென்றால் உலகம் எங்களை திரும்பிப் பார்க்கும். நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம். முடிவுகள் நாங்கள் விரும்பியபடி எங்கள் வழியில் செல்லும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இதையும் படிங்க : வேணும்னா பாருங்க.. யுவராஜ் கைஃப் மாதிரி.. ஆப்கான் அணிக்கு இவங்க 2 பேர் இருப்பாங்க – அஸ்வின் கணிப்பு

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நாங்கள் ஒரு சிறப்பான வெற்றியை பெற்று இருக்கிறோம். எனவே இந்திய அணிக்கு எதிராக எங்களால் வெற்றியுடன் தொடங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அனைவருமே இது குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறோம். எங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சிப்போம். பாகிஸ்தான் அணிக்கு எதிராக கிடைத்த வெற்றி தந்த நம்பிக்கையை பயன்படுத்துவோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -