டிஆர்எஸ் மீது சந்தேகம்.. பங்களாதேஷ் தமீம் இக்பால் கேள்வி .. ரவி சாஸ்திரி சரியான பதிலடி.. 2வது இந்திய டெஸ்ட்

0
96
Tamim iqbal and Ravi shastri

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது கான்பூரில் நடைபெற்று வரும் நிலையில் வங்கதேச அணி 107 ரன்கள் குவித்திருக்கும் நிலையில் மழை காரணமாக ஆட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் தொடக்க ஆட்டக்காரர் இஸ்லாம் ஆட்டமிழந்த விதம் குறித்து வர்ணனையாளர் ஆன முன்னாள் வங்கதேச வீரர் தமிம் இக்பால் கேள்வி எழுப்ப அதற்கு இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது கான்பூரில் நடைபெற்று வரும் நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன் படி முதல் இன்னிங்ஸ் தொடங்கிய வங்கதேச அணி வீரர்களான ஜாகிர் ஹாசன் மற்றும் இஸ்லாம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இதில் ஜாகிர் ஹாசன் தனது 24 வது பந்தில் ரன் ஏதுமின்றி ஆகாஷ் தீப் பந்துவீச்சில் வெளியேற மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இஸ்லாம் ஆட்டத்தின் 13 வது ஓவரில் ஆகாஷ் தீப்பின் பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டம் இழந்தார். நல்ல லெந்தில் வந்த பந்து இஸ்லாமின் பேடுகளை தாக்க உடனே பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் அம்பெயரை நோக்கி அப்பீல் செய்தார். இருப்பினும் அம்பையர் அப்பீல் தர மறுக்க, உடனே டிஆர்எஸ் எடுக்கப்பட்டதால் பந்து லெக் ஸ்டம்பை தாக்குவது தெளிவாக தெரிந்தது. இருப்பினும் வர்ணனையில் செயல்பட்டுக் கொண்டிருந்த முன்னாள் வங்கதேச வீரர் தமிம் இக்பால் இது குறித்து தனது சந்தேகத்தை எழுப்பினார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறிய போது “எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்ட பந்து கேமராவில் பார்க்கும் போது லெக் ஸ்டம்பிற்கு கீழே செல்வதால் அது நாட் அவுட் என்று நினைத்தேன். ஆனால் டிஆர்எஸ் வேறு மாதிரியான முடிவுகளை கொண்டிருக்கிறது” என்று கூறினார். அதாவது டிஆர்எஸ் முறையில் தவறு இருப்பதாக மறைமுகமாக விமர்சித்தார்.

ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தினேஷ் கார்த்திக் கூறிய கருத்தோடு ஒத்துப் போன ரவி சாஸ்திரி இது குறித்து கூறிய போது “கேமரா கோணங்களை பற்றி தினேஷ் கார்த்திக் பேசினார். கேமரா கோணங்கள் எப்போதும் நேரான தோற்றத்தை கொண்டிருக்காது. இதனால் அது கீழே செல்வது போன்ற தோற்றத்தை கொண்டிருக்கலாம். கான்பூரில் பவுன்ஸ் பந்துவீச்சு ஒரு பிரச்சனையாக இருக்காது என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க:வெறும் 35 ஓவர்கள்.. முடிவுக்கு வந்த முதல் நாள்.. இந்தியா பங்களாதேஷ் போட்டி மழையால் பாதிப்பு.. 2வது டெஸ்ட்

இந்த அவுட் குறித்து இந்திய அணியும் ஆச்சரியத்தில் இருந்தது. ஆனால் இது அவுட் என்று முழுமையாக நம்பிய ஒரே வீரர் பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் மட்டுமே” என்று கூறியிருந்தார். தற்போது வங்கதேச அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் குவித்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -