இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த பங்களாதேஷ் அணியின் மூத்த வீரர் ஷாகிப் அல் ஹாசன் தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
பங்களாதேஷ் அணியின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பை செய்தவராக ஷாகிப் அல் ஹாசன் 17 வருடங்கள் தாண்டி இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு இந்தியாவில் நடக்குமா அல்லது பங்களாதேஷில் நடக்குமா? என்பது குறித்து திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
ஷாகிப் அல் ஹசன் மீதான குற்றச்சாட்டு
ஷாகிப் அல் ஹசன் மீது பங்களாதேஷில் ஒரு பெரிய குற்றச்சாட்டு நிலுவையில் இருக்கிறது. இதன் காரணமாக அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு அவர் பங்களாதேஷ் செல்லவில்லை. வெளியில் இருந்து நேராக இந்தியாவுக்கு வந்து தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் மீண்டும் பங்களாதேஷ் திரும்ப முடியுமா? என்று தெரியவில்லை. மேலும் கைவிரலில் காயம் பட்டு இருக்கும் அவர் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? என்பது இன்னும் உறுதியாக வில்லை. இந்த நிலையில் தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு குறித்து அவர் மிகவும் சோகமான பதிலை அளித்திருக்கிறார்.
மிர்பூரில் ஓய்வு பெற விரும்புகிறேன்
இதுகுறித்து ஷாகிப் அல் ஹசன் கூறும்பொழுது “நான் பங்களாதேஷில் மிர்பூரில் என்னுடைய கடைசி டெஸ்ட் விளையாட விரும்புகிறேன். இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியாக என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியாக அமையும். எனக்கு பங்களாதேஷ் சொல்வது பிரச்சனை கிடையாது. ஆனால் நான் சென்றால் அது ஆபத்தாகவும் முடியலாம்”
இதையும் படிங்க : எனக்கு தோனி வேண்டாம்.. அந்த விஷயத்துக்கு ரோகித் சர்மாவதான் செலக்ட் பண்ணுவேன் – யுவராஜ் சிங் தேர்வு
“மிர்பூரில் எனது கடைசி டெஸ்ட் விளையாட வேண்டும் என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திடம் எனது கோரிக்கையை வைத்தேன். அவர்கள் என்னுடன் உடன்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்ய விரும்புகிறார்கள். எனவே பங்களாதேஷுக்குள் செல்ல முடியும் என நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.