75 நாள் உழைப்பு வீண் போகல.. என் மக்களுக்கு இந்த காரணத்துக்காக பரிசு தொகையை நன்கொடையா தரேன் – முஸ்பிகுர் ரஹீம் பேட்டி

0
17

வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி பாகிஸ்தான் அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

வங்கதேச அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹீம் தனது ஆட்டநாயகன் விருது குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற ராவல் பிண்டி ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. மேலும் முதலில் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் குவித்து தனது பந்துவீச்சு மேல் நம்பிக்கை வைத்து டிக்ளர் செய்தது.

அதற்குப் பிறகு முதல் தனது பேட்டிங்கை வங்கதேச அணி தொடங்க அனுபவ வீரர் முஸ்பிகுர் ரஹீமின் அபாரமான ஆட்டத்தால் வங்கதேச அணி 565 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 191 ரன்கள் குவித்து எதிர்பாராதவிதமாக இரட்டை சகத்தை தவறவிட்டார். அதற்குப் பின்னர் பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸில் 146 ரன்கள் மட்டுமே குவிக்க, வங்கதேச அணி 30 ரன்கள் வெற்றி இலக்கை எளிதாக அடைந்து வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

- Advertisement -

இதில் 191 ரன்கள் குவித்து வங்கதேச அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரஹீம் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தனது ஆட்ட நாயகன் பரிசுத்தொகையை வங்கதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாக கூறியிருக்கிறார். மேலும் வெளிநாட்டில் விளையாடிய மிகச் சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று என்று கூறி இருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் விளையாடிய சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று. ஏனென்றால் வெளிநாட்டு மண்ணில் நாங்கள் இதுவரை நாங்கள் பெரிதாக செயல்பட்டதில்லை. அனைத்து வீரர்களும் தாயகத்திலும் மற்றும் பாகிஸ்தானிலும் சிறப்பாக இந்த தொடருக்காக தயாராகினர். டெஸ்ட் தொடருக்கு முன்னதாக 2.5 மாதங்கள் இடைவெளி இருந்தது. அனைத்து வீரர்களும் மற்றும் நிர்வாகமும் அங்கு இருந்தனர். வெள்ளை பந்து விளையாடும் வீரர்கள் உலக கோப்பையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க:ஜாகீர் கான் பிரெட் லீ இல்லை.. அழகான பவுலிங் ஆக்சன் கொண்ட பவுலர் இவர்தான் – ஸ்டெய்ன் தேர்வு

பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். என்னால் முடிந்தவற்றை நான் நாட்டுக்காக சிறப்பாக செய்ய விரும்புகிறேன். நாட்டிற்காக சிறப்பாக செயல்படுவது எனக்கு உத்வேகம் அளிக்கிறது. இங்கு நான் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன் வங்கதேசத்தில் திரும்பவும் வெள்ளம் ஏற்பட்டதால் எனது ஆட்டநாயகன் விருதை மக்களுக்கு நன்கொடையாக வழங்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -