தற்போது 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் சுற்று வுடன் பாகிஸ்தான அணி வெளியேறியிருக்கிறது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தான் நட்சத்திர வீரர்கள் தான் முக்கிய காரணம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா குற்றம் சாட்டியிருக்கிறார்.
மூத்த வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரையும் தொடர்ந்து முன்னேறுத்துவது, உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த வீரர்கள் இருந்தாலும் கூட அவர்களை தேர்வு செய்யாதது, பயனற்ற வீரர்களை தொடர்ந்து தேர்வு செய்வது போன்றவையே இந்தத் தோல்விக்கு முக்கிய காரணம் என அவர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து டேனிஷ் கனேரியா பேசும் பொழுது “பயனற்ற அணியை தேர்ந்தெடுத்தார்கள். பாபர் ரிஸ்வானை மீண்டும் மீண்டும் கொண்டு வருகிறார்கள். இந்த பெயர்களை எத்தனை நாட்கள் பொறுத்துக் கொள்வது. பெரிய போட்டிகள் வந்தால் இந்த இருவரும் விளையாட தவறி விடுகிறார்கள். மேலும் இந்த இருவரும் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து போன்ற அணிகளுக்கு எதிராக மட்டுமே ரன்கள் எடுக்கிறார்கள். ஆனால் பாபர் அசாமை விராட் கோலி உடன் ஒப்பிடுகிறார்கள்.
இந்தியாவுக்கு உலக கோப்பையை வென்ற பயிற்சியாளர் கேரி கிரிஸ்டனை புதிய பயிற்சியாளராக கொண்டு வந்திருக்கிறீர்கள். ஆனால் அவருக்கு நேரம் தேவைப்படும். அவர் ஒன்றும் மந்திரவாதி கிடையாது. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருக்கும் அரசியலை புரிந்து கொண்டு அவர் வேலை செய்ய ஆரம்பிப்பார்.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் தொடர்ந்து ஓய்வு பெற்ற வீரர்களை மீண்டும் மீண்டும் கூட்டிக்கொண்டு வருவது, பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு அவமானகரமான ஒரு விஷயம். உள்நாட்டு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேசிய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதையும் படிங்க : அடுத்து வெஸ்ட் இண்டீஸ்ல இத நீங்க பாக்க போறிங்க.. அங்க இப்படிதான் இருக்கும் – ரவீந்திர ஜடேஜா பேட்டி
மேலும் அமெரிக்காவில் முதல் முறையாக பாகிஸ்தான் விளையாட வருகிறது. இங்குள்ள சூழ்நிலைகள் அனைத்தும் இவர்களுக்கு புதிதானது. ஆனால் இவர்கள் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்காவில் நடக்கும் வார்ம் அப் போட்டியை கூட வேண்டாம் என்று மறுக்கும் அளவுக்கு இவர்களுக்கு தைரியம் இருந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.