இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் இந்திய அணியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீரர் எப்பொழுதும் திட்டத்துடன் இருக்கக்கூடியவர் என ஆஸ்திரேலியா வீரர் உஸ்மான் கவாஜா கூறியிருக்கிறார்.
கிரிக்கெட் உலகின் சிறந்த இரண்டு அணிகள் மோதிக்கொள்ளும் டெஸ்ட் தொடர் என்கின்ற காரணத்தினால் இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி பொதுவான கிரிக்கெட் ரசிகர்களிடமும் இந்த தொடருக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தினமும் இந்த தொடர் குறித்து ஒரு செய்தியாவது வெளி வருகிறது.
90களுக்குப் பிறகு திரும்பும் வரலாறு
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இறுதியாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1990 ஆம் ஆண்டு விளையாடுகிறார்கள். அதற்குப் பிறகு தற்பொழுதுதான் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறார்கள். மேலும் இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் அதிவேக பெர்த் மைதானத்திலும், அடுத்த போட்டி பகல் இரவாகவும் நடைபெறுவது கூடுதல் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
மேலும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பதால் இந்தத் தொடர் சமநிலையில் முடிவதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவாக இருக்கிறது. எப்படியாவது இந்த முறை சொந்த நாட்டில் வைத்து இந்திய அணியிடம் டெஸ்ட் தொடரை கைப்பற்றி விட ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் மிகத் தீவிரமாக தயாராகி வருகிறது.
அவர் அபாரமான மூளை கொண்டவர்
இந்த நிலையில் இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா வெளிப்படையாக இந்திய அணியின் பலம் மற்றும் திறமைகள் குறித்து பேசிக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவருடைய ஒரு பேட்டியில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பற்றி மிகவும் உயர்வாக கூறுகிறார்.
இதையும் படிங்க : கம்பீர் நண்பரா இருந்ததில்ல.. அவர் பெரிய குடும்பத்து பையன்.. ஆனா இத செஞ்சாரு – ஆகாஷ் சோப்ரா பேச்சு
ரவிச்சந்திரன் அஸ்வின் பற்றி உஸ்மான் கவாஜா பேசும் பொழுது “அஸ்வின் ஒரு சிறந்த பந்துவீச்சாளர். அவர் எப்பொழுதும் வீயூகத்துடன் இருக்கக்கூடியவர். மேலும் எப்பொழுதும் ஒரு திட்டத்தை வைத்திருப்பார். அவர் அதை கண்டுபிடித்து போட்டியில் முன்னேற முயற்சி செய்வார். நான் கிரிக்கெட் மூளையை மிகவும் மதிக்கிறேன். அவருக்குஎதிராக விளையாடுவது எப்பொழுதும் அருமையானதாக இருக்கும். அவருடைய சவாலுக்காக நான் காத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.