ரோகித் விராட் சொல்றதுதான் சரி.. WTC பைனல் இப்படித்தான் நடக்கணும் – ஆஸி நாதன் லயன் அறிவிப்பு

0
340
Lyon

அடுத்து 2025 ஆம் ஆண்டு ஜூன் 11ம் தேதி இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறும் என ஐசிசி அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் இந்த இறுதிப் போட்டி எப்படி நடத்தப்பட வேண்டும்? என்பது குறித்து ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் காப்பாற்றுவதற்காக இரண்டு வருடங்களுக்கு சேர்த்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்திக் கொண்டு வருகிறது. எதற்காக ஆடுகளங்கள் போட்டிக்கு முடிவு தெரியும் வகையில் அமைக்கப்படுவதால் ரசிகர்களும் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை வேறு முறையில் நடத்த வேண்டும் என குரல்கள் என ஆரம்பித்திருக்கின்றன.

- Advertisement -

ரோகித் சர்மா – விராட் கோலி கோரிக்கை

இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ஒரே போட்டியாக நடத்தக்கூடாது என தங்கள் விருப்பத்தை தொடர்ந்து முன்வைத்து வந்திருக்கிறார்கள்.

ஏனென்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இரண்டு அணிகளும் இரண்டு வருடங்கள் இதற்காக கடுமையாக உழைக்கின்றனர். இது மற்ற வடிவ கிரிக்கெட் உலகக் கோப்பை போல கிடையாது. எனவே இது ஒரே போட்டியின் மூலம் யார் சாம்பியன் என்பதை கண்டறிவது நியாயமாகவும் இருக்காது. எனவே மூன்று போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்பட வேண்டும் என ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி கேட்டிருந்தார்கள்.

- Advertisement -

மூன்று போட்டி மூன்று நாடு

தற்போது இதுகுறித்து பேசி இருக்கும் ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் கூறும் பொழுது “நான் ஒரு விஷயத்தை பார்க்க விரும்புகிறேன். அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஒரு போட்டியாக இல்லாமல் மூன்று போட்டி கொண்ட தொடராக நடத்தப்பட வேண்டும். இப்படி நடத்தப்படுவது கொஞ்சம் சிறப்பாக அமையும். மூன்று கோட்டிகள் கொண்ட தொடராக இருக்கும் பட்சத்தில் ஒரு அணி மீண்டு வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதேபோல் ஒரு அணி தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என வெல்லவும் வாய்ப்பு உண்டு.

இதையும் படிங்க : நான் உலககோப்பையை கொண்டாடியதை.. என் பசங்களுக்கு காட்ட மாட்டேன்.. காரணம் இதான் – ராகுல் டிராவிட் பேட்டி

மேலும் இந்த மூன்று போட்டிகளையும் ஒரே இடத்தில் நடத்தாமல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா என மூன்று நாடுகளில் நடத்தலாம். இந்த மாறுபட்ட கண்டிஷன்கள் நல்ல சவாலை கொடுக்கக் கூடியதாகவும் அமையும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை எடுத்துக் கொண்டால் இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்த அணிகள் இறுதிப்போட்டியில் சந்திக்கின்றன. இந்த வகையில் இந்த இறுதிப் போட்டி என்பது மிகவும் சிறப்பானது. எனக்கு மற்ற எந்த வடிவ உலகக் கோப்பையும் விட இதுதான் மிகவும் முக்கியமானது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -