இந்திய அணிக்கு எதிரா.. என்னை வச்சி என்ன நடக்குதுனே தெரியல.. 2 பேர் விருப்பம் வேறயா இருக்கு – ஸ்டீவ் ஸ்மித் பேட்டி

0
300
Smith

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்க இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் பற்றி ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் முக்கிய விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்

இந்திய அணி நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்கிறது. முதல் டெஸ்ட் போட்டி இந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி துவங்குகிறது. கடந்த இரண்டு முறையாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி இரண்டு டெஸ்ட் தொடர்களை தொடர்ந்து என்று உள்ள காரணத்தினால் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் அச்சாணியாக ஸ்டீவ் ஸ்மித்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்க இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா தரப்பின் ஒட்டுமொத்த வியூகங்களும் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் களமிறங்குகிறார் என்பதை பொறுத்துதான் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் துவக்க இடத்தில் வந்தால் கேமரூன் கிரீன் மற்றும் மிட்சல் மார்ஸ் என இரண்டு வேகப்பந்துவீச்சு ஆல் கவுண்டர்களும் பிளேயிங் லெவனில் இருக்க முடியும். இல்லையென்றால் அவர் நான்காவது இடத்தில் வந்தால் ஒருவருக்குதான் இடம் கிடைக்கும். ஒருவேளை டிராவிஸ் ஹெட்டை துவக்க வீரராக அனுப்பினால் புதிய பந்தில் அவரை சீக்கிரம் இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

என்ன நடக்குதுனு தெரியல

இது குறித்து ஸ்டீவ் ஸ்மித் பேசும்பொழுது “இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நான் எந்த இடத்தில்பேட்டிங் செய்வேன் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இது குறித்து பின்னணியில் பேச்சுவார்த்தைகள் சென்று கொண்டிருக்கிறது. உஸ்மான் கவாஜா மற்றும் லபுசேனுக்கு நான் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்கின்ற விருப்பம் இருக்கிறது. அணிக்காக நான் எந்த இடத்திலும் பேட்டிங் செய்வேன்”

“தற்போது உலகின் சிறந்த இரண்டு டெஸ்ட் அணிகளாக நாங்கள் இருக்கிறோம். கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நாங்கள் அவர்களை தோற்கடித்தோம். அவர்கள் கடந்த இரண்டு முறையாக ஆஸ்திரேலியாவில் நல்ல கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள். மேலும் நாங்கள் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வென்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டது”

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணி இப்படிதான்.. ஆனா இங்கிலாந்து அந்த முட்டாள்தனத்த செய்யாதிங்க – நாசர் ஹுசைன் அறிவுரை

“நாங்கள் அவர்களுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவது போல இருக்காது. ஏனென்றால் இப்படியான தொடரில் ஒரு அணி முதலில் ஆதிக்கம் செலுத்தினால் பிறகு மீண்டு வருவது கடினம். எனவே இந்த தொடர் மிகவும் அருமையாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -