இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதற்காக தற்போது இரண்டு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக கருதப்படும் நாதன் லயன் இந்திய அணி வீரர் ரிஷப் பந்த் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய அணி கடைசியாக பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு முறையும் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. கடந்த பத்து வருடங்களாக இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணி இந்தியாவில் கடைசியாக நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் வெற்றி பெற்று முத்திரை பதித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் தற்போது மீண்டும் நவம்பர் மாதத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இதே தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பந்த் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலாக திகழ்ந்து வருகிறார். அதிலும் குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர் நாதன் லயனுக்கு எதிராக ஐந்து முறை ஆட்டம் இழந்தாலும் 347 பந்துகளை எதிர்கொண்டு 229 ரன்கள் குவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் நாதன் லயன் பந்த் குறித்த சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ரிஷப் பந்த் போன்ற எலக்ட்ரிக் வீரருக்கு எதிராக நீங்கள் பந்து வீசுகிறீர்கள். உலகத்தில் உள்ள அனைத்து திறமைகளையும் அவர் பெற்று இருக்கிறார். ஒரு பந்து வீச்சாளராக நீங்கள் தவறு செய்வதற்கான இடம் என்பது அங்கு சிறிதாக இருக்கும். அத்தகைய சூழ்நிலைகளில் நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் பெரிய சவாலாக இருக்கும்.
ஒரு பந்துவீச்சாளராக நான் வீசும் பந்து சிக்ஸருக்கு செல்கிறது என்று தெரியும். ஆனால் சிக்சர் அடிப்பதை பற்றி நான் பயப்படவில்லை. இதில் சவால் என்னவென்றால் ரிஷப் பந்த் போன்ற ஒருவரை கிரீசில் வைத்து அவரை ஆட்டம் இழக்க வைக்க ஓரிரு வாய்ப்புகளை கொண்டு வருவது ஆகும். ஆனால் இந்த நிகழ்வு மிகவும் வேடிக்கையாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:ரிஷப் பண்ட் அதை கேட்டாலும் செய்வாரு.. ஆனா தோனி விஷயம் கொஞ்சம் கஷ்டம் – இயான் ஸ்மித் பேட்டி
2018 மற்றும் 19ஆம் ஆண்டில் பந்த் இந்தத் தொடரில் நான்கு டெஸ்ட் போட்டிகள் விளையாடி 350 ரன்கள் குறித்து இரண்டாவது அதிக ரன்கள் குறித்த வீரராக உருவெடுத்து இருக்கிறார். இந்த ஆண்டில் அவரது சராசரி 58.33 ஆகும். மேலும் 2020-21ம் ஆண்டில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 68.50 சராசரி உடன் 274 ரன்கள் குவித்து மூன்றாவது அதிக ரன்கள் குவித்த வீரராக உருவெடுத்து இருக்கிறார்.