ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஜியோப் லாவ்சன் இந்த முறை பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் என மிக உறுதியாக தெரிவித்திருக்கிறார்.
இவர் 1980 முதல் 89 ஆம் ஆண்டு வரையில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடியவர். வலது கை வேகபந்து வீச்சாளரான இவர் விளையாடும் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நட்சத்திர வீரராக இருந்தார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பயிற்சியாளராக செயல்படுகிறார். இவர் பாகிஸ்தான் அணிகளும் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
10 ஆண்டு ஆதிக்கம்
கிரிக்கெட் உலகில் டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் ஆசஸ் தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு எப்பொழுதும் உண்டு. அந்தத் தொடருக்கு நீண்ட பாரம்பரியமும் வரலாற்று பின்னணியும் இருக்கிறது. இந்த நிலையில் ஆசஸ் தொடரின் மதிப்பை இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரும் பெற்றிருக்கிறது.
அதே சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய முன்னுரிமை கொடுக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் வைத்து கடந்த இரண்டு முறையும் தொடர்ந்து இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது. எனவே இந்த வருடம் இறுதியில் நவம்பர் மாதம் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.
விராட் கோலி போலி வில்லன்
தற்போது இந்த தொடர் குறித்து பேசி இருக்கும் ஜியோப் லாவ்சன் கூறும்பொழுது ” விராட் கோலி ஒரு போலி வில்லனாக களத்தில் இருப்பார். அவருடைய நடவடிக்கை இயல்பான பும்ராவுக்கு எதிர்ப்பதமாக இருக்கும். பொதுவாக வேகப்பந்துவீச்சாளர்கள் பைன் லெக்கில் பீல்டிங் செய்வார்கள். இந்த வகையில் பும்ரா தன்னுடைய புன்னகையால் தொடரின் போது ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று, இதயங்களை வெல்லக்கூடியவராக இருப்பார்.
களத்தில் சத்தமாக இருத்தல் மற்றும் பிரமாதமாக பீல்டிங் செய்தல், போட்டியின் போது பேசுவதில் ஆர்வம் கொண்ட ஆஸ்திரேலியா வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுதல் இப்படி விராட் கோலி ஏதாவது ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்.
இதையும் படிங்க : செப்டம்பர் திட்டம்..இந்திய அணியில் விட்ட இடத்தை பிடிக்க இத செய்ய போறேன் – தேவ்தத் படிக்கல் பேட்டி
விராட் கோலி இப்படி இருப்பது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு வருத்தத்தை உண்டாக்கலாம். ஆனால் அவர் 50 அல்லது 100 ரன்கள் அடிக்கும் பொழுது ஆஸ்திரேலியா ரசிகர்களிடமிருந்து பாராட்டையும் பெறுவார். ஆஸ்திரேலியா ரசிகர்கள் போட்டித் தன்மையை விரும்பக் கூடியவர்கள். அதே சமயத்தில் இந்த முறை பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி ஆஸ்திரேலியா அலமாரிக்கு வரப்போகிறது” என்று கூறி இருக்கிறார்.