ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் இந்திய அணியில் ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேனுக்கு பந்து வீசுவது மிகவும் கடினமான விஷயம் என கூறி இருக்கிறார்.
இந்திய அணி இந்தாண்டு நவம்பர் மாதம் இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதை ஒட்டி ஆஸ்திரேலிய வீரர்கள் நிறைய பேட்டி அளித்து வருகிறார்கள். அதில் ஒன்றில் ஹேசில்வுட் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஹேசில்வுட் ஆரம்பம் மட்டுமே வெற்றி
ஹேசில்வுட் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாலில் வைத்து டெஸ்ட் தொடரில் அறிமுகமான. மேலும் அவரது அறிமுகத்தில் ஐந்து விக்கெட்டுகளும் கைப்பற்றினார். அந்த முறை தான் கடைசியாக உள்நாட்டில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றது.
இதற்கு அடுத்து தொடர்ந்து இந்திய அணி இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் வைத்து டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி அசத்தி இருக்கிறது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியை ஆஸ்திரேலியா கையில் ஏந்தவே கிடையாது. இதன் காரணமாக தொடருக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் வெளியில் இருந்து ஏறி வருகிறது.
இவருக்கு பந்து வீசுவதுதான் கடினம்
இந்த நிலையில் ஜோஸ் ஹேசில்வுட் கூறும்பொழுது “இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆரம்ப காலகட்டத்தில் பேட்டிங் வரிசையில் ஐந்து அல்லது ஆறாம் இடத்தில் மிகவும் தடுமாறிக் கொண்டிருந்தார். பிறகு அவர் இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்தார். அதற்குப் பிறகு நிறைய புதிய பந்துகளை எதிர் கொண்டு விளையாடினார்”
“மேலும் ரோகித் சர்மா வேகப்பந்து வீச்சை மிகவும் சிறப்பாக விளையாடுவதாக நான் உணர்கிறேன். அவருக்கு பவுன்ஸ் பந்துவீச்சு ஒரு பிரச்சினையாக இருப்பதாகவே தெரியவில்லை. மேலும் பந்தில் மூவ்மெண்ட் இருப்பதும் அவருக்கு பிரச்சனையாக இல்லை. உலகத்தில் எந்த நேரத்தில் எந்த இடத்திலும் அதை இவர் எளிதாக செய்கிறார். எனவே ரோகித் சர்மாவுக்கு பந்து வீசுவது மிகவும் கடினமானது”
இதையும் படிங்க : 8 முறை அசத்தல்.. 147 ஆண்டு வரலாறு.. இலங்கை கமிந்து மெண்டிஸ் சரித்திர சாதனை.. நியூசிலாந்து டெஸ்ட்
“அதே சமயத்தில் எங்கள் அணியின் நாதன் லயன் ரோகித் சர்மாவுக்கு எதிராக சில நல்ல வெற்றிகளை பெற்றிருப்பதாகவும் நான் நினைக்கிறேன். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் ரோஹித் சர்மாவுக்கு எதிராக நாதன் லயனுக்கு நல்ல வெற்றி இருக்கிறது. எனவே நாங்கள் ரோகித் சர்மா விக்கெட்டை கூடிய விரைவில் கைப்பற்றுவோம் என்று நம்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.