இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் புகழ்பெற்ற தொடரான பார்டர் கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடர் இந்த வருட இறுதியில் நடைபெற இருக்கிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோஸ் ஹேசில்வுட் இந்திய அணி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
2014 மற்றும் 15ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியா அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. கடந்த பத்து வருடங்களாக இந்திய அணியின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக 2020 மற்றும் 21ஆம் ஆண்டில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மோசமான தோல்விக்கு பிறகு விராட் கோலி சொந்த சூழ்நிலையின் காரணமாக வெளியேற, மற்ற வீரர்கள் காயமடைந்து வெளியேறிய போதிலும் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
அந்த ஆண்டில் நடைபெற்ற தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது. அதிலும் குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து மோசமான விமர்சனங்களை சந்தித்த போதிலும் அதற்கடுத்த டெஸ்ட் போட்டிகளில் தக்க பதிலடி கொடுத்தது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணி வீரர் ஜோஸ் ஹேஸில்வுட் இந்திய அணி சில நேரங்களில் சிறந்த அணியை விட பலமான அணி என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணியை இதுவரை டெஸ்ட் தொடரில் வீழ்த்தாத சில வீரர்கள் இருக்கின்றனர் என்று கூறுவது ஆச்சரியமாக உள்ளது. இங்குதான் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும் சொந்த மண்ணில் நடைபெறும் ஒவ்வொரு தொடரையும் வெல்ல ஆர்வம் காட்ட வேண்டும். குறிப்பாக 2020-21ஆம் ஆண்டு அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 36 ரன்களுக்கு ஆட்டம் இழக்கச் செய்தோம்.
அந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நாங்கள் மிகுந்த நம்பிக்கையோடு காணப்பட்டோம். அடுத்தடுத்த போட்டியில் வெல்ல முடியும் என்று நம்பினோம். ஆனால் அந்த கடைசி டெஸ்டில் இந்தியா தோற்றபோது இந்தியா பி அணியோடு நாங்கள் விளையாடினோம் என்று மக்கள் கூறினார்கள். ஆனால் சில நேரங்களில் இந்திய அணி பலமான அணியை விட சிறந்த அணி. அவர்கள் எல்லா வடிவத்திலும் நம்ப முடியாத வலுவை பெற்று இருக்கின்றனர்.
இதையும் படிங்க:கடவுளே இந்த விஷயம் பாகிஸ்தான் கிரிக்கெட்ல நடக்கக்கூடாது.. நஷிம் ஷா சொன்னது கவலையா இருக்கு – கம்ரன் அக்மல் வருத்தம்
அதைத்தான் நாங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார். இந்திய அணியை முதல் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்ததில் ஹேசில்வுட்டின் பங்கு முக்கியமானது. அந்த இன்னிங்ஸில் குறிப்பாக ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.