இலங்கை அணி இங்கிலாந்து சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. நேற்று தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சரிவில் இருந்து மிகச் சிறப்பாக பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் மீண்டு வந்திருக்கிறது.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நேற்று முதல் நாள் முடிவில் பென் டக்கெட் 86 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, கேப்டன் ஒல்லி போப் ஆட்டம் இழக்காமல் சதம் அடித்து 103 ரன்கள் எடுக்க, முதல் நேர ஆட்ட நாள் முடிவில் 44.1 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு 221 எடுத்து இருந்தது.
பந்துவீச்சில் அசத்திய இலங்கை அணி
இங்கிலாந்து அணியின் கையில் 7 விக்கெட் இருந்த காரணத்தினால் எப்படியும் 400 ரன்கள் தாண்டும் என்று இரண்டாவது நாளில் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி மேற்கொண்டு 104 ரன்கள் மட்டும் சேர்த்து 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து அணியின் தரப்பில் கேப்டன் ஒல்லி போப் மிக அதிகபட்சமாக 156 பந்துகளில் 154 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில் மிலன் ரத்னாயகே 3, விஷ்வ பெர்னாடோ, லகிரு குமாரா மற்றும் தனஞ்செய டி சில்வா மூவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
பேட்டிங்கில் மீண்ட இலங்கை அணி
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா சிறப்பாக விளையாடி 64 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து திமுத் கருணரத்தனே 9, குசால் மெண்டிஸ் 14, ஏஞ்சலோ மேத்யூஸ் 3, தினேஷ் சண்டிமல் 0 ரன்கள் என வரிசையாக வெளியேற, இலங்கை அணி ஒரு கட்டத்தில் 93 ரன்னுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த நிலையில் ஜோடி சேர்ந்த கேப்டன் தனஞ்செய டி செல்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் இருவரும் இரண்டாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் மேற்கொண்டு விக்கெட் தராமல் பார்த்துக் கொண்டார்கள். இந்த ஜோடி 173 பந்தில் 117 ரன்கள் எடுத்தது. தனஞ்செய டி சில்வா 64, கமிந்து மெண்டிஸ் 54 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள்.
இதையும் படிங்க : 158 ஸ்ட்ரைக் ரேட்.. 3 விக்கெட்.. ஆல் ரவுண்டராக கலக்கிய கிரீன்.. ஸ்காட்லாந்தை ஒயிட் வாஷ் செய்த ஆஸி அணி
இலங்கை அணி நெருக்கடியான நிலையில் இருந்து தற்போது ஐந்து விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருக்கிறது. மேற்கொண்டு இங்கிலாந்து அணியை விட 114 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. ஒரு கட்டத்தில் 150 ரன்களுக்குள் சுருண்டு விடும் நிலையில் இருந்து தப்பித்து இங்கிலாந்து அணியின் ஸ்கோரை தாண்டும் வாய்ப்புக்கும் வந்திருக்கிறது. மேலும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்தை மடக்கி இருக்கிறது.