44 ஓவர் அதிரடி.. மீண்டும் பாஸ்பால் ஆடிய இங்கிலாந்து.. சிக்கிய இலங்கை அணி.. போப் பதிலடி

0
1008
Pope

தற்போது இலங்கை அணி இங்கிலாந்துக்கு சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி கேப்டன் ஒல்லி போப் சதத்தால் வலிமையான நிலையில் இருக்கிறது.

இந்த தொடரில் இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்து இலங்கை அணி தொடரை இழந்துவிட்டது. இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. மேலும் அணியில் இரண்டு மாற்றங்களும் செய்திருந்தது.

- Advertisement -

கேப்டன் போப் மீது விமர்சனம்

முதலில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டான் லாரன்ஸ் 21 பந்தில் 5 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்த தொடர் முழுக்க கிடைத்த தொடக்கத்தை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் தவித்த பென் டக்கெட் இந்த முறை 79 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சித்தர்கள் உடன் அதிரடியாக 86 ரன்கள் குவித்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட்டில் மிகவும் பாதுகாப்பற்ற வீரர், கேப்டன் பதவிக்கு தகுதி இல்லாதவர் என மைக்கேல் வாகன் மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்த கேப்டன் ஒல்லி போப் மூன்றாவதாக பேட்டிங் செய்ய வந்தார். சொந்த நாட்டு முன்னாள் வீரரால் விமர்சனம் செய்யப்பட்டதற்கு பதில் சொல்ல வேண்டிய நெருக்கடி ஒல்லி போப்புக்கு இருந்தது.

- Advertisement -

பதிலடி கொடுத்தா போப்

இந்த நிலையில் வெளிச்சம் குறைபாடு இருந்த இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஒல்லி போப் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் அபாரமாக சதம் அடித்து 103 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 103 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். ஜோ ரூட் 13 ரன்னில் ஆட்டமிழக்க துணை கேப்டன் ஹாரி புரூக் 8 ரன் எடுத்து களத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க : 43 பந்தில் சம்பவம்.. இங்லீஷ் தனி சாதனை.. ஸ்காட்லாந்தை புரட்டி எடுத்த ஆஸி அணி.. தொடரையும் வென்றது

இன்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 44.1 ஓவரில், ஒரு ஓவருக்கு அதிரடியாக ஐந்து ரன்கள் வீதம் எடுத்து, மூன்று விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்த முறைதான் இங்கிலாந்து அணியின் பேட்டிங் வழக்கமான பாஸ்பால் முறையில் அதிரடியாக அமைந்திருக்கிறது. கைவசம் ஏழு விக்கெட்டுகள் இருக்கின்ற காரணத்தினால் ஏதாவது மேஜிக் நடக்காமல் தோல்வியிலிருந்து இலங்கை அணியால் தப்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -