ஆசிய கோப்பை.. ஒரு நாள் முன்பே பிளேயிங் 11 அறிவிப்பு.. பாகிஸ்தான் அதிரடி.. இந்தியா போட்டிக்கு வித்தியாசமாக தயாராகும் பாக்.!

0
4766
PCB

இந்தியா அணி நாளை 16வது ஆசியக்கோப்பை தொடரில் ஒருநாள் கிரிக்கெட்டின் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியை சந்திக்க இருக்கிறது!

இன்று சம்பிரதாய முறையில் போட்டிக்கு முந்தைய நாளில் இரு அணிகளின் கேப்டன்களும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்கள்.

- Advertisement -

நாளை எப்படியான அணியை களம் இறக்கப்படும் என்பது குறித்து பேசி இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, நேற்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியை பார்த்து, அதற்கேற்றபடி விளையாடும் அணி உறுதியாகிவிட்டதாக கூறியிருந்தார். ஏனென்றால் அதே மைதானத்தில்தான் நாளை இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்கிறது.

மேலும் இந்திய அணியில் நாளை இசான் கிஷான் விளையாடுவது உறுதி. ஏனென்றால் கே.எல்.ராகுல் இல்லாத நிலையில் அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பர் முறையாக இதுவரை சேர்க்கப்படவில்லை.

இஷான் கிஷான் நாளை அணியில் இடம்பெறுவதோடு மிடில் வரிசையில்தான் விளையாடுவார் என்பதும் ரோஹித் சர்மாவின் பேச்சிலிருந்து தெரிய வந்திருக்கிறது. எந்தவிதமான பரிசோதனை முயற்சியும் செய்யப் போவதில்லை என்று அவர் கூறியிருந்தார். எனவே யாருடைய இடத்தையும் தொந்தரவு செய்யாமல் கே.எல்.ராகுல் இடத்தை தருவார்கள் என்று தெரிகிறது.

- Advertisement -

இந்திய அணியின் நிலைமை இவ்வாறு இருக்க, பாகிஸ்தான் அணி எல்லா விதத்திலும் மிகத் தெளிவாக செட்டில்டு ஆன அணியாக இருக்கிறது. அந்த அணியில் விளையாடும் 11 வீரர்கள் யார்? என்பது குறித்து எந்த விதமான குழப்பமும் இல்லை.

மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு விளையாடும் போட்டிக்கு ஒருநாள் முன்பாகவே விளையாடும் லெவனை அறிவிக்கும் அளவுக்கு வந்துவிட்டது. நாளை இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு இன்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அணியை அறிவித்துவிட்டது.

நாளை இந்தியாவுக்கு எதிராக களம் இறங்கும் பாகிஸ்தான் அணி:

ஃபகார் ஜமான், இமாம்- உல்- ஹக், பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஆகா சல்மான், இப்திகார் அஹமத், ஷதாப் கான், முகமது நவாஸ், ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்.